முல்லைத்தீவில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் மரணம் பலர் காயம்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் வாகனம் தடம்புரண்டதில் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் லயன்ஸ் கோப்ரல் தரத்தை சேர்ந்தவர் எனவும், வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனையே விபத்துக்கு காரணம் எனவும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.