கனடாவில் கொரோனாவின் தாக்கத்திற்கு கணவன் – மனைவி பலி

கோவிட்-19 வைரசின் தொற்று நோய்க்கு இலக்காகி கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு ஈழத்தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்.

கனடா பிரம்டன் ரொறொன்டோ பகுதியை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா மற்றும் அவரின் மனைவி ஆகியோரே மரணமடைந்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் பெற்றோரான இவர்கள் ஒன்றாக மரணமடைந்தது மிகுந்த அதிர்ச்சியை அங்கு வாழும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அதிக ஈழத்தமிழ் மக்கள் பலியாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.