இலங்கை-அடையாளம் காணப்படாத சடலங்களால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சுகாதாரத்துறை

அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவதாக சுாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை விடுப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார பணிப்பாளர் தலைமையிலான சுகாதார தரப்பினருக்கும் ,நீதி அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

அடையாளம் காண முடியாத சடலங்களை அகற்ற முடியாததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனை பிணவறையில் குறைந்தளவு இடமே காணப்படுவதுடன், அடையாளம் தெரியாத சடலங்கள் காணப்படுவதால் ஏனைய சடலங்களை அடக்கம் செய்வதில் வைத்தியசாலை அதிகாரிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.