தனிமைப்படுத்தல் நிலையத்தில் பெண் மரணம்; கொரோனா பாதிப்பா?

கம்பஹா மாவட்டத்தில் கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

அந்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். தனிமைப்படுத்தல் மையத்துக்கு சென்ற 10 நிமிடங்களில் அந்தப் பெண் இறந்துளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர் கொரொனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.