தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியாவின் தாயாரான மைக்கல் ராசாமேரி காலமானார்.
வடமராட்சி – கரவெட்டியில் தனது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார்.
மேஜர் சோதியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் தளபதி ஆவார். விடுதலைப் புலிகள் மணலாறு காட்டில் மறைந்துவாழ்ந்த சமயம் 1990ஆம் ஆண்டு வீரமரணமானார்.
இவரின் நினைவாகவே விடுதலை புலிகள் தனது படையணிகளில் ஒன்றுக்கு சோதியா என்று பெயரிட்டமையும் குறிப்பிடத்தக்கது.