கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்- இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்தான ஒப்பந்தம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்- இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்தான ஒப்பந்தம்: கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று  கொழும்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வெஸ்ட் கன்டெய்னர் இன்டர்நெஷனல் டேர்மினல்’ என்ற பெயரில் புதிய கூட்டு நிறுவனத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி அந்த நிறுவனத்தின் மற்றைய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் 15 வீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்றன.

இந்திய சந்தைக்கு அனுப்பப்படும் சுமார் 40 % கொள்கலன் சரக்குகளை இந்த துறைமுகம்  கையாள்வதால் இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021