வியட்நாம் அதிபர் டோ லாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (07) நாட்டை வந்தடையவுள்ளார். இதன்படி, வியட்நாம் அதிபர்இன்று இரவு நாட்டை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் அதிபருடன் சுமார் 200 பேர் கொண்ட தூதுக்குழுவினர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் அதிபர் டோ லாம் நாளை வெள்ளிக்கிழமை (08) இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதேவேளை, வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.



