உக்ரைனின் மனித உரிமை மீறல்- ஐ.நா. சபையில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்

ஐ.நா. சபையில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்

ஐ.நா. சபையில் இருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24ம் திகதி  முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒன்றரை மாதங்களாக தாக்குதல் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவை போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன.  இருந்தாலும் கூட ரஷ்யா போரை நிறுத்தவில்லை.

இந்நிலையில் உக்ரைனின் புக்கா நகரப் படுகொலை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. கைகள் கட்டப்பட்டு, நெற்றியிலும், நெஞ்சிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சடலங்கள் புக்கா நகரில் இருந்து மீட்கப்பட்டன. இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 6ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், உக்ரைன் போர் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் போது, புச்சா, இர்ஃபின் நகரங்களில் கிடந்த பிணக் குவியல் காட்சிகளை திரையில் காட்டி “உக்ரைன் மக்கள் குடியிருப்புகளில், வீடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய வீரர்கள் பொழுதுபோக்குக்காக எங்கள் மக்களைக் கொன்றுள்ளனர். கழுத்தறுத்து, நெற்றியில் சுட்டு கொலை செய்துள்ளனர். சிலரின் அங்கங்களை துண்டித்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். இத்தனையையும் செய்வது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடு. அந்த நாடு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனை தீர்மானங்களையும் தோற்கடிக்கிறது. இந்நிலையில், ஐ.நா.வுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களால் உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலையே கலைத்துவிடுங்கள்” என்று காட்டமாக தனது உரையை முன்வைத்தார்.

இந்நிலையிலேயே ஐ.நா சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் ரஷ்யா இடை நீக்கம் செயப்பட்டுள்ளது.

Tamil News