தமிழகத்திற்கு செல்ல முயன்ற சிறுவர்கள் ஐவர் உள்ளிட்ட 12 பேர் மன்னாரில் கைது

தமிழகத்திற்கு செல்ல முயன்ற சிறுவர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தமிழகத்திற்கு செல்ல முயன்ற சிறுவர்கள் ஐவர் உள்ளிட்ட 12 பேர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட போது கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்த தலைமன்னாரை சேர்ந்த நால்வருடன் சேர்ந்து தமிழகத்திற்கு செல்ல முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைக்குழந்தை உள்ளிட்ட ஐந்து சிறுவர்களும், பெண்கள் 4 பேர், ஆண்கள் 3 பேர் என 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.