கோட்டா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.ம.முன்னணியும் கையொப்பம்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

கோட்டா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

கோட்டா அரசுக்க எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை கையொப்பமிட்டனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இருவரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்துகொண்டார்.

Tamil News