இந்திய பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து

இலங்கை மக்களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் எரிபொருள் ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோக பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு குறித்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. இதன்படி, நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு இந்தியா இதுவரை சுமார் 440,000 மெற்றிக் தொன் பல்வேறு வகையான
எரிபொருட்களை வழங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Tamil News