தமிழ்நாடு: அகதி முகாமில் தமிழர் ஒருவர் தற்கொலை

அகதி முகாமில் தமிழர் ஒருவர் தற்கொலை

தமிழகம்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நகுலேஷ்வரன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜான்சி (38). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மனைவி இறந்ததில் இருந்து நகுலேஷ்வரன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நகுலேஷ்வரன் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அப் பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது நகுலேஷ்வரன் வீட்டிற்குள்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்தி  காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News