தமிழ்நாடு: அகதிகள் முகாம் மாணவி பலாத்காரம்- இளைஞர் கைது

அகதிகள் முகாம் மாணவி பலாத்காரம்

அகதிகள் முகாம் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருஅகதிகள் முகாமைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அச்சப்பன் (வயது 22) என்பவர்  மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறை அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.