திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் மரத்தில் ஏறி போராட்டம்

மரத்தில் ஏறி போராட்டம்: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் பாண்டியன் என்பவர் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் திருச்சி சிறப்பு முகாமில்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கைகைச் சேர்ந்த கெட்ட யான் பாண்டியன் என்பவரும் உள்ளார்.

இவரது குடும்பத்தினர் நாமக்கல்லில் உள்ளனர். இந்நிலையில், நாமக்கலில் இருந்து பாண்டியனை சந்திக்க சிறப்பு முகாமிற்கு பாண்டியனின் மனைவி அனு இன்று சென்றுள்ளார். சிறை வளாகத்தின் நுழைவாயிலில் பாண்டியன் மனைவியை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டியதாக குற்றம்சுமத்தப்படுகின்றது.

இது குறித்து அனு, தனது கணவரிடம்  தகவல் சொல்லியுள்ளார். இதைக் கண்டித்து, சிறப்பு முகாமில் உள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பாண்டியன் திடீரென சிறை வளாகக்த்தில் உள்ள மரத்தில் ஏறி,  காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டு, போராட்டம் நடத்தினார்.

Tamil News