இலங்கையின் கடன் விவகாரத்திற்கு சரியான நேரத்திலான ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜி20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பொதுகட்டமைப்பின் கீழ் சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.