தமிழக முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்த இலங்கை – இந்திய அரசுகள்

தமிழக முதல்வரின் கோரிக்கை

தமிழக முதல்வரின் கோரிக்கை புறக்கணிப்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தை இரு நாடுகளும் புறக்கணித்ததுடன், கடந்த வாரம் படகுகளும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனை செய்யப்பட்ட 135 படகுகளில் 48 அடி நீளமான படகு 13 இலட்ச ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. காரைநகர் கடற்படை துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த ஏலவிற்பனையில் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.