சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக இலங்கைக் குழு அமெரிக்கா பயணமாகிறது

இலங்கைக் குழு அமெரிக்கா பயணமாகிறது

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கையின் உயர்மட்டக்குழு ஒன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவின் வொசிங்டன் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக குறித்த குழுவினர் பயணமாகவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை 05 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். எம் சிறிவர்தன ஆகியோர் இவ்வாறு பயணமாகவுள்ளனர்.

Tamil News