கோடியக்கரை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை படகு

383 Views

கரையொதுங்கிய இலங்கை படகு

கோடியக்கரை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை படகு

தமிழ்நாடு,  நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லாத நிலையில் இலங்கை படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரை ஒதுங்கியுள்ளது.

இதுனை அவதானித்த அப் பகுதி மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரி கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த படகில் (OFRP-A-0851 KCH )என்ற இலக்கம் காணப்படுகின்றது.

குறித்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா?  அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகா? இப் படகில் யாரும்  வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்  குற்றப்புலானாய்வுத்துறை மற்றும்  கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply