ஜனாதிபதியாக ரணிலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது-பணியில் இருந்து விலகும் சுகாதார ஊழியர்கள்

இடைக்கால ஜனாதிபதியாக ரணிலுக்கு வாய்ப்பு வழங்க கூடாதெனத் தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணியில் ஈடுபட போவதாகவும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த சங்கம்,

No description available.

நாளை 19ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் நாளை காலை 10 மணி முதல் பி.ப 2 மணிவரை தமது பணிகளில் இருந்து விலகுவதாவும், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ( இடைக்கால ஜனாதிபதியாக) வாய்ப்பு வழங்க கூடாது, எரிபொருள், உணவு, போக்குவரத்து வசதிகள், மருந்துகளை வழங்க முடியாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணியில் ஈடுபட போவதாகவும்  தெரிவித்துள்ளது.