இன்னும் ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கில் சீனர்களின் ஆதிக்கம் இருக்கும்-இரா.சாணக்கியன்

pearl one news இரா. சாணக்கியன் இன்னும் ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கில் சீனர்களின் ஆதிக்கம் இருக்கும்-இரா.சாணக்கியன்

இன்னும் ஐந்து வருடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் சீனர்களின் ஆதிக்கம் வரலாம் என   மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் இன்று சிறியளவிலேயே சீனா காலடியை வைத்துள்ளது.தெற்கில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துள்ளனர்.கொழும்பு துறைமுக நகரம் ஊடாக மேல்மாகாணத்திலும் சீனா காலூன்றியுள்ளது.இதேபோன்று நுரைச்சோலை மின்உற்பத்தி சாலை,அதிவேக நெடுஞ்சாலை,அதேபோன்று பாலங்களுடன் கொழும்பினை வந்தடையும் அதிவேக நெடுஞ்சாலை அமையவுள்ளது.

தெற்கில் செயற்படும் வேகத்தில் சீனர்கள் செயற்படுவார்களானால், 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீனர்களின் திட்டமானது எவ்வாறு எட்டு வருடத்தில் தெற்கிலும் மேற்கிலும்  ஆதிக்கம் வந்ததோ அவ்வாறு இன்னும் ஐந்து வருடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் அவர்களின் ஆதிக்கம் வரலாம்” என்று தெரிவித்துள்ளார்.