ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். 

ஜப்பான் அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். ஜப்பனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னதாக, ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா மற்றும் ஜப்பான் – இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய காலை உணவு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

இதன்போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்து நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி,மீண்டு எமது நாட்டுக்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.