அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழில் சிறைக் கூண்டுக்குள் விடுதலைப் பொங்கல்

சிறைக் கூண்டுக்குள் விடுதலைப் பொங்கல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழில் விடுதலை பொங்கல் என்ற பெயரில் சிறைக் கூண்டுக்குள் விடுதலைப் பொங்கல்   நிகழ்வு ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

போர் நடைபெற்ற காலங்களில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் தரப்பு பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலை பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் முற்றவெளிப் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது அரசியல் கைதிகளின் உறவுகள், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.