மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்: பத்தரமுல்லை – தியத்த உயன பாராளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பாராளுமன்றம் அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாராளுமன்றத்தை அடைவதைத் தடுக்கும் வகையில் வீதித்தடைகள் இடப்பட்டிருந்த போதும், மாணவர்கள் முதலாவதாக இடப்பட்டிருந்த வீதித் தடையை அகற்றி முன்நோக்கிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் அவர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்து இந்த கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் இரண்டாவதாக இடப்பட்டிருந்த வீதித்தடையையும் உடைத்ததால், மூன்றாவது தடையை நோக்கி காவல்துறையினர் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.