கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை செயலகம் மற்றும் ஏனைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரு நாள் மற்றும் வழமையான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தது.
இதையடுத்து பத்தரமுல்ல பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிப்பதற்காக தூரப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் குழப்பமடைந்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அதிகளவான மக்கள் கூட்டம் கடவுசீட்டினை பெறுவதற்கு இன்றையதினம் (05) காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.