தமிழகத்தில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிப்பு

ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின்

தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அதே போன்று ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னை கோவை சேலம் மதுரை வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அதிகம் உள்ளனர்.