420 Views
இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் “விவசாய சமூகத்திற்கு இலங்கை இராணுவம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும். உணவு நெருக்கடிக்கு எதிரான தனது போரின் முதல் படியாக, அரசாங்கத்தால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் இராணுவம் விசாரணை நடத்தியுள்ளது.
விவசாய சபையின் அறிவுறுத்தலின்படி, இந்த வெற்று நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்யத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்படும் போது இராணுவம் நின்றதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
அச்சுறுத்தலை தடுக்க கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.