இலங்கை, IMF இடையிலான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் ஆரம்பம்

அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) அடுத்த சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடலை இன்று ஆரம்பிக்கவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுவர் மசாஹிரோ நோசாக்கி, மே மாதம் 23 ஆம் திகதி வரை இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் குழு கலந்துரையாடலில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“இலங்கையின் கடன் நீடிக்க முடியாதது என மதிப்பிடப்படுவதால், விரைவான நிதியளிப்பு கருவி உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை அங்கீகரிப்பது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான போதுமான உத்தரவாதங்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News