இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்-போர்க்களமாக மாறும் “Myna go gama“

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொள்வோர் மீது இன்றைய தினம் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் அலரி மாளிகைக்கு அருகில் பெருந்திரளான பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் கூடியுள்ளதுடன் பிரதமர் பதவி விலகக் கூடாது என அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி, பதவி விலக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். Tamil News