“கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிவிட்டுவந்தவர்கள் எதனையும் மீட்கமுடியாமல் நிற்கின்றனர்.வருங்காலத்தில் சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்கவேண்டிய நிலைமையும் வரலாம்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சீனா அனைத்து நாடுகளையும் தங்கள் கைவசமாக்குவதற்கு பயன்படுத்தும் உத்தியே கடன்கொடுத்து அதன்மூலம் அந்த நாட்டுக்குள் ஊடுருவும் செயற்பாடுகளையே சீனா வழமையாக செய்துவருகின்றது. பலநாடுகளை சீனா இவ்வாறு தன்வசமாக்கியுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதியே அதிக வளம்கொண்ட பகுதியாகும்.இலங்கையில் அந்நியர் ஆட்சிக்காலத்தில் கரையோரப்பகுதியே அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருந்தது.1815ஆம் ஆண்டு வரைக்கும் அவர்கள் கண்டி இராஜதானியை கைப்பற்றவில்லை.கண்டி இராஜதானியை கைப்பற்றியது, ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லையென்பதை காண்பிக்கவே.
நுவரேலியாவினை கூட ஓரு சுற்றுலாமையமாகவே பயன்படுத்தியுள்ளனர்.
சீனர்களுக்கு அநுராதபுரத்திலேயோ பொலநறுவையிலையோ இருப்பதைவிட வடக்கு கிழக்கில்தான் கரையோரப்பகுதி மூன்றில் இரண்டு உள்ளது.இன்று கடலட்டை வளர்ப்பார்கள்,நாளை கொச்சி தோட்டம் செய்வார்கள்,எங்கள் ஆற்றில்வந்து மீன்பிடிப்பார்கள்.இது சீனாவின் ஊடுருவல் திட்டம்.
துறைமுக நகரமென்பதை காட்டி வரிசெலுத்தாமல் இருப்பதற்கான திட்டமாகவும் இருக்கலாம்.துறைமுக நகரில் பதிவுசெய்துவிட்டு வெளியில் சென்று தமது நடவடிக்கைகளை சீனர்கள் முன்னெடுக்கமுடியும்.இது ஆரம்பம் மட்டுமே.
இன்று கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று கூறிவிட்டுவந்தவர்கள் எதனையும் மீட்கமுடியாமல் நிற்கின்றனர்.வருங்காலத்தில் சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்கவேண்டிய நிலைமையும் வரலாம்” என்றார்