முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறையினரின் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்தி, அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் தொடர்பாக இந்த நினைவேந்தலை செய்த 10 பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில் ஆஜராகிய மூத்த சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.