முகமாலையில் படையினர் துப்பாக்கிச் சூடு;இளைஞன் பலி

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்.மிருசுவில் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. தற்போது பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.