Tamil News
Home செய்திகள் முகமாலையில் படையினர் துப்பாக்கிச் சூடு;இளைஞன் பலி

முகமாலையில் படையினர் துப்பாக்கிச் சூடு;இளைஞன் பலி

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்.மிருசுவில் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. தற்போது பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

Exit mobile version