பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சமாதான முயற்சிகளைப் பாதிக்கும், முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உட்பட, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மோதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தங்களை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு நேற்றையதினம்(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கை நாட்டினர் உட்பட, கணிசமான சர்வதேச சமூகம் இப்பிராந்தியத்தில் வசிக்கின்றனர்; அவர்களின் பாதுகாப்பும், நல்வாழ்வும் இலங்கைக்கு முதன்மையான கவலையாக உள்ளது.
பொதுமக்கள், முக்கிய குடிமை உட்கட்டமைப்புகள் மற்றும் இன்றியமையாத உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பை இலங்கை வலுவாக வலியுறுத்துகிறது.
பதற்றங்களைத் தணிப்பதற்காக, அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுமாறு இலங்கை அழைப்பு விடுக்கிறது.



