இலங்கை – மாலைத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.