யாழ். பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு

யாழ். பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமானது.

நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக இன்று நிகழ்நிலைப் பட்டமளிப்பு நடைபெற்று வருகிறது.

நிகழ்நிலையில் இன்று காலை 9 மணி முதல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா ஆரம்பமானது.

பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தின்  சமூகத்தள பக்கங்களான   https://www.facebook.com/university.jaffna

https://www.youtube.com/channel/UCMNzGVtXq9_Y4oYOYEkd-7Q ஆகிய இணைப்புகளின் மூலம் ஒளிபரப்பாகிறது.

இதே நேரம், நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்படவுள்ளது.

ilakku-weekly-epaper-150-october-03-2021