மேற்குலக நாடுகளின் ஜி7 அமைப்புக்கு நிகராக ரஸ்யா, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் என்ற அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக பிறிக்ஸ் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பு பல்துருவ உலக ஒழுங்கின் மையப்புள்ளியாக உள்ள நிலையில் இந்தியா அதில் இருந்து வெளியேறுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையிலான நெருக்கம் மற்றும் பாகிஸ்தானை இந்த அமைப்புக்குள் கொண்டு வருவதற்கு சீனா முனைப்பாக நிற்பதே இந்தியாவின் முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின் றது.
அண்மையில் இடம்பெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் சீனா நேரிடையாக பாகிஸ்தானுக்கு உதவியிருந்தது. அதேசமயம் இந்தியா சீனாவிற்கு எதிரான நாடுகளுடன் தனது உறவை பலப்படுத்தியும் வந்துள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்னாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை பலப்படுத்தி வந்ததுடன், அமெரிக்காவின் தளங் கள் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தியா 375 மில்லியன் டொலர்களுக்கு பிரம் மோஸ் ஏவுகணைகளையும் கடந்த வருடம் விற்பனை செய்திருந்தது.
மேற்குலக நாடுகளுக்கு எதிரான கருத்துக் களில் இருந்த அண்மைக்காலமாக இந்தியா விலகியே இருந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. அது இஸ்ரேலு டன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தியது டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, யப்பான் ஆகிய நாடுகள் கொண்ட குவாட் என்ற அமைப்பிலும் இணைந்திருந்தது.
ஆனால் இந்தியாவின் இந்த முடிவு ஆசிய பிராந்தியத்தில் மிகப்பெரும் ஒரு அரசியல் மற்றும் படைத்துறை சமநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்தியாவின் பிராந் திய வல்லாதிக்கமும் இழக்கப்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.