கோட்டாவின் செயலகம் மீது ஒளி பாய்ச்சி நூதன போராட்டம்

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது நேற்று இரவு ஜனாதிபதி செயலகம் மீது ஒளி பாய்ச்சி நூதன போராட்டம் முன்னெடுக்கப் பட்டிருந்தது.

கோட்டா அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் பெற்றுவரும் நிலையில் நேற்று நூதன முறையில் ஜனாதிபதி செயலகத்துக்கு ஒளிபாய்ச்சி போராட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

“கோ கோம் கோட்டா” போன்ற வசனங்களை ஜனாதிபதி செயலகக் கட்டத்தில் ஒளிரும்படி புறெஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டன.

நூதன போராட்டம்

அதேபோல, எரிபொருள் தட்டுப்பாட்டினைச் சுட்டிக்காட்டும் காட்சிகள் உட்பட பல்வேறு காட்சிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்வாறு ஜனாதிபதி செயலகத்தின் மீது ஒளிரவிடப்பட்ட “கோ கோம் கோட்டா’ என்ற வாசகம் தற்போது ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவினரால் தடை ஏற்படுத்தி மறைக்கப்பட்டுள்ளது.

ப்ரொஜெக்டர் முன்பாக பெரிய காகித அட்டை வைக்கப்பட்டு ஜனாதிபதி செயலகம் மீது ஒளிரச் செய்யப்பட்ட “கோ கோம் கோட்டா” வாசகம் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.