காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன இந்திய மீனவரின் உடல் இன்று காலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் ஊடுருவிய இந்திய மீன்பிடிப் படகை கடற்படையினர் கைது செய்ய முயன்ற சமயம் கடற்படையினரினதும் மீனவர்களதும் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு நொருங்கி கடலில் மூழ்கியது.
இதன்போது படகில் இருந்த மூவரில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். இருந்தபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவிரின் உடல் சற்று முன்னர் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.
காங்கேசன்துறை கொண்டுவரப்படும் உடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.