உள்ளூர் மீனவர்களின் படகை மோதிச்சென்ற இந்திய படகு?

பருத்தித்துறை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்களின் படகை மோதிவிட்டு இந்திய இழுவைப் படகு தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில்  உள்ளூர் மீனவர்கள்,இன்று அதிகாலை ஐந்து மணியளவில் படகு ஒன்றில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய இழுவைப் படகு ஒன்று, உள்ளூர் மீனவர்களின் படகை மோதிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து உள்ளூர் மீனவர்களின் படகு மற்றும் வலைகள் கடலில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 3 மீனவர்களும் மற்றொரு படகின் உதவியுடன் நண்பகல் கரை திரும்பியுள்ளனர்.

பருத்தித்துறை கடற்தொழிலாளர் சங்கத்தினைச் சேர்ந்த மரியதாஸ் ரஜினோல்ட் (வயது-37) குலசிங்கம் அஜித்குமார் (வயது-25) அருள்சீலன் ஜோர்ஜ் வாசிங்ரன் (வயது-36) ஆகிய மீனவர்களே  இவ்வாறு கரை திரும்பியுள்ளனர்.