இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது.

இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத் தேவைகளில் பாதியை இரண்டு மாதங்களுக்குப் பூர்த்தி செய்யும்.

மேலும் இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும், இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகளவு பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

“இந்த முக்கிய தருணத்தில் இலங்கைக்கு மேலதிக மனிதநேய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அறிவிப்பதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஜப்பான் அரசாங்கத்தால் WFP மூலம் உணவு உதவியானது மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் முடிந்த அளவு மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய உணவு வழங்கப்படும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.”என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய மிகொசி ஹிதேகி தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பின்மை இன்னும் அதிக அளவில் இருப்பதாக WFP இன் அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் ஏழு பேர், புரதம் மற்றும் பால் போன்ற சத்தான உணவைக் குறைப்பது அல்லது உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக அது தெரிவிக்கின்றது.

“பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களும் குழந்தைகளுமே எங்களின் மிகப் பெரிய கவலையாகும்” என WFP இலங்கையின் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக்கி கூறினார்.

“பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறும் வகையில் எங்கள் முயற்சிகளை அளவிடுவதற்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ரூஙரழவ் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் நாடானது இலங்கை அரசாங்கத்திற்கும் றுகுPக்கும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீண்டகாலமாக நன்கொடை அளித்து வருகிறது, அவசரநிலைகளில் முக்கியமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.

ஜப்பானின் சமீபத்திய நிதியுதவியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக இலங்கை மக்களுக்கு அதன் ஆதரவின் விரிவாக்கமாகும்.

WFPஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது அவசரச் செயல்பாட்டைத் தொடங்கியதில் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி மூலம் 3.4 மில்லியன் மக்களை அடையும் இலக்கை நெருங்கி வருகிறது.