Home Blog Page 3053

ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச – பூமிகன்

ஐதேக அமைக்கும் மெகா கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும். ரணில் – சஜித் மோதல் இதில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. நெருக்கடி மோசமடைந்து – தான் களமிறங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டால், கரு ஜயசூரியவை களமிறக்கிவிட்டு, தான் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திட்டத்துடன் ரணில் செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்கள் நிகழ்கின்றன. அடுத்ததாக என்ன நடக்கும் எனச் சொல்லமுடியாத நிலை உருவாகியிருக்கின்றது. ரணில் – சஜித் மோதல் குறித்து கடந்த வாரமும் இந்தப் பகுதியில் பார்த்தோம். இரு தரப்பினருமே விட்டுக்கொடுப்பதில்லை என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள். கட்சியின் பாராளுமன்றக்குழு கடந்த வாரம் கூடியபோதும் இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டிருந்தது. கட்சியின் செயற்குழு கடந்த திங்கட்கிழமை கூடியபோதும் இதே பிரச்சினைதான் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

கட்சிக்குள் சஜித்துக்கான ஆதரவு அதிகரித்திருப்பதை அவதானித்த ரணில், நிலைமைகளைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவதற்கு மற்றொரு உபாயத்தைக் கையாண்டார்.

சனாதிபதி வேட்பாளர் தெரிவை ஐ.தே.க. மேற்கொள்ளாது, அதன் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கும் ஜனநாயக தேசிய முன்னணி மூலம் அந்தத் தெரிவை மேற்கொள்ளலாம் என்பதுதான் அவரது திட்டம். ஐ.தே.மு.வில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளும் இணைந்துகொள்ளும். அவை தன்னை ஆதரிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த உபாயத்தை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ரணில் முன்வைத்தார்.Ranil Group ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச - பூமிகன்

புதிய கூட்டணியில் தனக்கு இசைவான நிலையை ஏற்படுத்தும் வகையில் அதன் யாப்பு விதிகளையும் தயாரிக்க ரணில் முயன்றதாகச் சொல்லப்படுகின்றது. இப்போது கட்சியில் புயலை ஏற்படுத்தியிருப்பது அதுதான். புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்கு கட்சியின் செயற்குழு அங்கீகாரமளித்திருக்கின்றது. ஆனால், அதற்காக ரணிலால் தயாரிக்கப்பட்டிருக்கும் யாப்பு விதிகளைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது என சஜித் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

ரணிலின் திட்டத்தின்படி பத்து உறுப்பினர்களைக் கொண்ட தலைமைத்துவச் சபை ஒன்று அமைக்கப்படும். கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அதில் இடம்பெறுவார்கள். ஐ.தே.க.வில் இல்லையென்றாலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜிதவும் தலைமைத்துவக் குழுவில் இடம்பெறுவார்.

கூட்டணியின் செயலாளர் பதவியை தன்னுடைய விசுவாசியான ராஜிதவுக்குக் கொடுப்பதுதான் ரணிலின் திட்டம். கூட்டணியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்த தலைமைத்துவக் குழுவுக்கே இருக்கும். சஜித், கரு யாரும் இதில் இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்தத் தலைமைத்துவக் குழுவை அமைப்பதற்கு ரணில் முற்பட்டிருக்கும் நிலையிலேயே சஜித் தரப்பு கொதித்தெழுந்திருக்கின்றது.

ரணிலின் இந்த முயற்சிக்கு சஜித் தரப்பு ஒரேயடியாக ஆப்பு வைத்துவிட்டது. “சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ‘கூட்டணி’ ஒன்றை அமைப்பதற்கு நாம் ஆதரவளிப்போம். ஆனால், சனாதிபதி வேட்பாளர் தெரிவை அதற்கு முன்னர் நாம் முன்னதாக மேற்கொள்வோம்” என சஜித் தரப்பு தெரிவித்தது. அத்துடன், கூட்டணியின் செயலாளர் பதவியும் ஐ.தே.க.வின் வசமே இருக்க வேண்டும் என்பதையும் சஜித் தரப்பு உறுதியாக இருந்தது. ரணில் தன்னைப் பலப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாகவே இதனைச் செய்வதாகவும் அவர்கள் கருதினார்கள். இதனால்தான் செயலாளர் பதவியைத் தனக்குத் தரவேண்டும் என சஜித் பகிரங்கமாகவே கோரினார்.

இது குறித்து மனோ கணேசனுடன் பேசிய போது, சஜித் இவ்வாறு கூறியிருக்கின்றார். “நான் ஒருபோதும் கூட்டணிக்கு எதிரானவன் அல்ல. அப்படி ஒரு தவறான கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உண்மையில் கூட்டணி இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் தனித்து வெல்ல முடியாது என எனக்கு மிக நன்றாக தெரியும். ஜனநாயக தேசிய கூட்டணியின் உத்தேச யாப்பின் சில சரத்துகளை திருத்த வேண்டுமெனவே நான் கூறுகிறேன். உண்மையில் ஐதேகவும், உங்களது தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஜனநாயக தேசிய கூட்டணியின் பொது செயலாளராக பணியாற்றக்கூட நான் தயாராக இருக்கிறேன்.”

கூட்டணியின் சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியைத் தன்னிடம் வைத்திருக்கவேண்டும் என்பதில் சஜித் அக்கறையாக இருப்பதை இது உணர்த்துகின்றது. கூட்டணியில் இணையும் கட்சிகளில் பெரும்பாலானவை ரணிலை ஆதரிக்கலாம் என்ற நிலையிலேயே, சனாதிபதி வேட்பாளரை முதலில் தெரிவு செய்வோம். கூட்டணி உடன்படிக்கையில் பின்னர் கையப்பமிடுவோம் என சஜித் அணி பிடிவாதமாக இருந்தது. கட்சிக்குள் சஜித்துக்கு அதிகளவு ஆதரவு இருப்பதும் தெரிந்தது. வேட்பாளரைத் தெரிவதற்கு செயற்குழுவில் வாக்கெடுப்பு எனப் போனால், தனக்கு ஆபத்தாகிவிடலாம் என ரணில் அஞ்சினார்.ranil and karu phot The hindu ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச - பூமிகன்

இந்தப் பின்னணியிலேயே வியாழக்கிழமை இரவு கரு ஜயசூரியவை அலரி மாளிகைக்கு அழைத்த ரணில் அவருடன் நீண்ட நேரம் தனிமையில் உரையாடியதாகச் சொல்லப்படுகின்றது. அதன்போதே கருவை சனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கான தனது விருப்பத்தை ரணில் வெளியிட்டதாகச் சொல்லப்படுகின்றது. நிறைவேற்று அதிகார சனாதிபதிப் பதவியை இல்லாதொழிப்பது என்பது அரசியலில் நீண்டகாலமாகச் சொல்லப்படும் வாக்குறுதி. அதனைச் செய்வதன் மூலம், அதிகாரமிக்க பிரதமராக தான் தொடர்ந்தும் இருப்பதுதான் ரணிலின் திட்டம். சஜித் தரப்பு கருவை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவில்லை.

அத்துடன், கூட்டணிக்கான யாப்பைத் திருத்த வேண்டும் என்பதிலும் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். இரு தரப்பினரும் வாழ்வா? சாவா? என்ற வகையில் மோதலில் குதித்திருக்கும் நிலையில், திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பின்போடப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நெருக்கடி ஐ.தே.க.வில் பாரிய பிளவு ஒன்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உருவாகியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

கோத்தபாயாவுக்கு எதிராக நிற்கக்கூடிய தகுதி,வல்லமை பொன்சேகாவுக்கே உண்டு

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உண்டு.

எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்‌ஷவின் பெயரைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிக்கவுள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு கோத்தபாய களமிறக்கப்பட்டால் அவர் போர் வெற்றியை முன்னிலைப்படுத்தித்தான் தேர்தல் பிரசாரம் செய்வார்.

இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய முழுத் தகுதி சரத் பொன்சேகாவுக்கே உண்டு. ஏனெனில், போரை வழிநடத்திய தளபதி அவரே. அவரை மீறிப் போர் வெற்றிக்கு கோத்தபாய உரிமை கோர முடியாது.

அதேவேளை, சர்வதேச அரங்கில் பல குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியுள்ள கோத்தபாயவின் முகத்திரையைக் கிழிக்கக்கூடிய சகல வல்லமையும் பொன்சேகாவுக்கே உண்டு.

எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவைத் தவிர வேறொருவர் அறிவிக்கப்பட்டால் அவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டும்.

அதைவிடுத்து கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்கினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புண்டு” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளனர்.

ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் கூட்டமையால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை -கோத்தா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.

மட்டக்களப்பின் எல்லையில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிகந்த பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில், வெலிகந்தையிலிருந்து வடமுனைக்கு செல்லும் போது கிழக்கே 8கிலோமீற்றர் தொலைவில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் ஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ் ஆலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிசங்களை தேடித் தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

1900 ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மருத மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வழிபட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

1925ஆம் ஆண்டு முத்துக்கல் உடையாரும் பொது மக்களும் சேர்ந்து ஆலயத்தை அபிவிருத்தி செய்து ஆலயத்திற்குரிய மண்டபம், மடம் அமைத்து 1929ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆலயத்திற்கு நிரந்தரமாக அர்ச்சகரை நியமித்து தினசரி புசையுடன் விசேட புசைகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை, வாழைச்சேனை, தம்மங்கடவை, முத்துக்கல் போன்ற பல பகுதிகளிலுள்ள பொது மக்கள் சேர்ந்து ஆலயத்திற்கு வருடாந்த அலங்கார உற்சவத்தை ஆடி மாதத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

எமது புராதன பொக்கிசங்களையும் தமிழினம் வாழ்ந்த இடங்களையும் மீளவும் பொறுப்பேற்று இடிபாடுகளை திருத்தி பாதுகாக்க வேண்டியது தலையாய கடமை என சமூக ஆர்வலர்களும் நலன் விரும்பிகளும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

weligantha 2 மட்டக்களப்பின் எல்லையில் புராதன ஆலயம் கண்டுபிடிப்புஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றமும் இவ்வாலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிசங்களை தேடித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை பழைய நிலைக்கு புனரமைத்து வழிபாட்டிற்குரிய இடமாக மாற்றுவதற்கு கிழக்கு இந்து பொது மக்களிடமிருந்து ஆலய அபிவிருத்திக்கான உதவிகளை வேண்டி நிற்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

 

இரு முக்கியஸ்தர்களின் இரகசிய சந்திப்பு – வியூகம் வகுக்கின்றன சிங்களக் கட்சிகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று 06.08 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றதாக அறியமுடிகின்றது.

06.08 அன்று மாலை 7.30 வரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

ஐ.தே.கவுக்குள் கூட்டணி அமைப்பது, மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான குழப்பங்கள் தொடர்பாக பேசப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி வெற்றியீட்டுவது என்பது தொடர்பில் சிங்களக் கட்சிகள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பறக்கும் கார்கள்

ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030ஆம் ஆண்டிற்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

பெரிய அளவிலான ஆளில்லா விமானத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், தலைநகர் டோக்கியோவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கின்ற இந்த நிறுவனம் 4பேர் பயணம் செய்யும் வகையில் பட்டரியில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்துள்ளது. தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எழுந்து பறக்கும் கார், 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்திற்கும் மேலாகப் பறந்து, பின்னர் தரையிறங்கியது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறிய என்.இ.சி.நிறுவனம், முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்து 2026ஆம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார்.

காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸ்மீர் மக்களின்  போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸ்மீர் விவகாரத்தில் எங்களிற்குள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காக எந்தளவிற்கு செல்வதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஸ்மீரிற்கான விசேட அந்தஸ்த்தை நீக்கும் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி இந்தியாவில் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும் என கருதுகின்றது என  இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் – சீனா

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், அதை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெருப்புடன் விளையாடுவோருக்கு அதிலேயே தான் அழிவு என கலகக் காரர்களை சீன அரசின் ஹாங்காங் மற்றும் மக்கவ் விவகாரத்துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

சூழலை தவறாக கணித்து அரசு கட்டுப்பாட்டோடு இருப்பதை பலவீனம் எனக் கருதி தப்புக்கணக்கு போட வேண்டாம் என்று போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. முன்னதாக ஹாங்காங்கில் வன்முறையை தூண்டிவிட்டு, சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் கள்ளத்தனமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறியிருந்தது. இதே போல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஹாங்காங் போலீசாருக்கு எதிர்காலத்தில் ஆயுதங்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர். ஹாங்காங்கில் மக்கள் மீது அதிக படையை சீனா பயன்படுத்துவதாகாவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்

பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிய அரசின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் அரசு இநதிய தூதரான அஜய் பிசாரியாவை நேரில் அழைத்து கண்டனத்தை தெரிவித்தது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் அமளியில் முடிந்ததால் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவையில் பேசினார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் இப்பிரச்சனையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக கூறினார். பாஜகவின் சித்தாந்தத்தால் இந்தியாவின் சிறுபான்மை மக்கள் இனவெறிக்கு ஆளாக்கப்படுவதை சர்வதேச சமுகத்திற்கு முன் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சிறீலங்கா அரசு பொறுப்பேற்றுள்ளது – அரசு பதவி விலகுமா?

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசு பொறுப்பு ஏற்பதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த தாக்குதலுக்கு சிறீலங்கா அரசும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் பொறுப்பாளிகள். அரசின் தவறுகளே தாக்குதலுக்கு காரணம். பல இடங்களில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் தோல்வி கண்டுள்ளோம்.

எங்கு தவறு நடந்தது என்ற விசாரணைகளில் இருந்து அரசு தப்ப முடியாது. ஐ.எஸ் இன் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு அறிக்கைகள் கிடைத்தன, சிரியாவில் போரிடும் சிறீலங்கா முஸ்லீம்கள் தொடர்பிலும் எம்மிடம் புலனாய்வுத் தகவல்கள் இருந்தன.

சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் எமக்கு இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். ஆனால் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு நான் அழைக்கப்படவில்லை. இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே அதில் நான் பங்குபற்றியிருந்தேன். அதன் பின்னர் காவல்துறை மாஅதிபரும் அதற்கு அழைக்கப்படவில்லை. பின்னர் தான் எனக்கு தெரிந்தது பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒக்டோபர் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது என.

பல நாடுகளில் இருந்தும் புலனாயவுத் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தன. ஆனால் ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு சிறீலங்கா அரசும் அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் அனைவரும் பதவி விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிறீலங்கா போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாடுகளில் அவ்வாறு நிகழாது என தெரிவிக்கப்படுகின்றது.