காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார்.

காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸ்மீர் மக்களின்  போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸ்மீர் விவகாரத்தில் எங்களிற்குள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காக எந்தளவிற்கு செல்வதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஸ்மீரிற்கான விசேட அந்தஸ்த்தை நீக்கும் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி இந்தியாவில் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும் என கருதுகின்றது என  இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.