ஜப்பானில் பறக்கும் கார்கள்

ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030ஆம் ஆண்டிற்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

பெரிய அளவிலான ஆளில்லா விமானத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், தலைநகர் டோக்கியோவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கின்ற இந்த நிறுவனம் 4பேர் பயணம் செய்யும் வகையில் பட்டரியில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்துள்ளது. தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எழுந்து பறக்கும் கார், 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்திற்கும் மேலாகப் பறந்து, பின்னர் தரையிறங்கியது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறிய என்.இ.சி.நிறுவனம், முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்து 2026ஆம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.