Home Blog Page 3049

ரணிலின் தலையில் துப்பாக்கியை வைத்து நாம் கூட்டணி அமைக்கவில்லை – மனோ

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

உங்கள் கட்சி தலைமையகம் சிறிகொத்தைக்கு சென்று உங்கள் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையில் துப்பாக்கியை வைத்து நாம் இந்த கூட்டணி உடன்பாட்டில் பலவந்தமாக கையெழுத்திட முயற்சிக்கவில்லை.

ஆணும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். பெண்ணும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்போதே திருமணம் நடக்கும். இதுவும் அப்படிதான் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மாத்தறை தெணியாவையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,

கூட்டணி அமைப்பதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

உண்மையில் இங்கே பெரும் பிரச்சினையில்லை. குழப்பமடைய தேவையில்லை. இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என நாம்தான் தீர்மானித்தோம். இந்த யோசனையை நானே முதலில் ஜனவரி மாதமே கட்சித்தலைவர் கூட்டத்தில் தெரிவித்தேன்.

ஏனெனில் கடந்த 2010ம் ஆண்டும், 2015ம் ஆண்டும் வெளியில் இருந்துதான் வேட்பாளர்கள் வந்தார்கள். 2010ம் ஆண்டு வந்த சரத் பொன்சேகா இப்போது ஐதேகவுக்கு உள்ளே இருந்தாலும், அப்போது வெளியில் இருந்தே வந்தார்.

இந்த முறை ஐதேகவின் உள்ளே இருந்து வேட்பாளரை தேர்வு செய்வதே நியாயமானது என நானே முதலில் சொன்னேன்.

ஆகவே இம்முறை நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஐதேகவிடம் இந்த பொறுப்பை நாம் ஒப்படைத்து விட்டோம்.

ஆகவே ஐதேகவில் உள்ள சேனநாயக்கவின், ஜயவர்தனவின், பிரேமதாசவின் புத்திரன்கள், பேரன்கள், கொள்ளுபேரன்கள் சிந்தித்து ஒழுங்கான முடிவை எடுங்கள்.

ஒருநாளில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவையும், பாராளுமன்ற உறுப்பினர் குழுவையும் கூட்டுங்கள். தேநீர், கோப்பி வழங்குங்கள். கூட்டத்தில் எவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றது என்பதை கண்டறியுங்கள்.

உண்மையில் இந்த தாமதத்துக்கு நாம் காரணமில்லை என்பதை நாடு முழுக்க உள்ள அடிமட்ட ஐதேக தொண்டர்களுக்கு நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

உங்கள் கட்சிக்குள் இருந்து வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் என நாம் இந்த பொறுப்பை ஐதேக செயற்குழுவுக்கு ஒப்படைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே தாமதம் அங்கேதான்.

மக்கள் விரும்பும் வேட்பாளரை பெயரிடுவதை ஐதேகவின் உள்ளே இருந்து தடுத்து கொண்டு சிலர் இருக்கின்றனர். இவர்கள் எதிர்கட்சியுடன் இரகசிய உடன்பாடு கண்டுள்ளார்கள் எனவும் நான் சந்தேகிக்கின்றேன்.

இனிமேல் நாம் பொறுக்க மாட்டோம். எம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

உங்கள் வேட்பாளர் பெயரை எங்களுக்கு அறிவியுங்கள். நீங்கள் சொல்லும் வேட்பாளருடன் எமக்கு உடன்பாடு இருந்தால் நாம் உங்களுடன் வருகிறோம். இல்லாவிட்டால் வெளியேறுகிறோம். நீங்கள் உங்கள் வேட்பாளரை அழைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லுங்கள்.

ஜனாதிபதி தேர்தலின் வென்றால் போதாது. அதன்பிறகு பாராளுமன்ற தேர்தலிலும் வெல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும்.

பாராளுமன்ற தேர்தலில் ஐதேகவுடன்தான் நாம் வர வேண்டும் என்று சொல்லி எம்மை பயமுறுத்த முயல வேண்டாம். தமிழ் முற்போக்கு கூட்டணி நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட தயார்.

எங்களுக்கு உடன்பாடு இல்லாத வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் கொண்டு வந்தாலோ, அதேபோல் தேவையில்லாமல் உட்கட்சி சண்டை போட்டுக்கொண்டு, உங்கள் கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவி நாறடித்தாலோ, நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.

எம்மை போலவே ஏனைய சிறு கட்சிகளும் வெளியேறும் என நான் நினைக்கிறேன்.

அப்புறம் ஐதேக தனியாக சுடுகாட்டுக்கு செல்லலாம். உங்களுடன் சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை.

இந்நாட்டின் மிகப்பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை அதற்குள்ளே இருக்கும் சிலர், இன்னமும் குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களுக்கு தலையெடுக்க விடாமல் அரசியல் புதைகுழியில் தள்ள முயற்சிக்கிறார்கள்.

கட்சிக்கு உள்ளே இருந்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அது நாம் அல்ல. அவர்கள் ஐதேகவின் உள்ளேதான் இருக்கிறார்கள்.

நான் சொல்வதில் உள்ள உண்மையை நாடு முழுக்க உள்ள இலட்சக்கணக்கான ஐதேகவின் அடிமட்ட உறுப்பினர்கள் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

ஈழத்தமிழர் தேசத்துக்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழத்தை வென்றடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது என நா.த.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தோ-பசுபிக் பெருங்கடலின் மூலோபாய புள்ளியில் கேந்திர முக்கியத்துவம் ஒன்றாக இலங்கைத்தீவு மாறியுள்ளதோடு, தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பானது இதன் புவிசார் அரசியலில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. இதனை மையப்படுத்தியே இலங்கைத்தீவினை நோக்கி சர்வதேச சக்திகள் தமது நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் உலகத்தமிழர்களின் பங்களிப்போடு ஈழத்தமிழர்களை இந்தோ-பசுபிக் புவிசார் அரசியற் புள்ளியில் சக்திமிக்க ஒரு தரப்பாக மாற்றும் வகையிலும், அனைத்துலக தரப்புக்களின் நகர்வுகளை ஆழமாக கவனத்தில் கொண்டும், ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பாக இருக்கின்ற தமிழீழத்தை வென்றடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வகுக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் வழிகாட்டி பரிந்துரைகள், மற்றும் முரசறைப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ள வெளிவிகாரக் கொள்கைகள் ஆகியனவற்றை, சமகால நிலைமைகளோடு கவனத்திலெடுத்து, இன்னும் செழிமையான ஓர் வெளிவிவகாரக்  கொள்கையினை வகுக்கும் முயற்சியாக இது அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்திலும், புலத்திலும் உள்ள வள அறிஞர்கள், பொதுமக்கள், சமூக அரசியற் தரப்புக்கள் என பல்வேறு தரப்புக்களின் பங்களிப்பினை உள்ளடக்கியதாக வெளிவிகாரக் கொள்கையினை வகுக்கும் முயற்சிகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்தோடு, இதற்கான அறைகூவல் விரைவில் வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர் மைத்திரிக்கு என்ன கொடுப்பது என யோசிக்கிறோம் – ரோஹித

மலரவுள்ள புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும், பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நிச்சயம் பதவி வகிப்பார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எப் பதவியை வழங்கலாம் என்பது தொடர்பில் இரு தலைவர்களும் பேசி தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேளனத்தில் விடுக்கப்பட்ட தீர்மானங்களை நாட்டு மக்கள் ஆவலுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கட்சி பேதமின்றி நாட்டின் எதிர்காலம் கருதியே  நாட்டு மக்கள் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக  பலமான ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது   அனைவரது எதிர்பார்ப்பாகவும் இன்று  காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இரத்த கறைபடிந்த கைகளுடன் ஒருவர் நாட்டின் தலைவராக முடியாது – மங்கள

ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம் மஹிந்த எதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

‘இலங்கையும், அதன் மக்களும் ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து’ என்பதாகவே மஹிந்தவின் மனதிலுள்ள எண்ணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டமையைத் தொடந்து அமைச்சர் மங்கள சமரவீர மிகநீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

தென்னிலங்கையில் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலுக்கான வேலைகள் இந்த மாதம் முதல் தீவிரம் பெற்றுள்ளது. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளும் தமது வேட்பாளர்கள் தொடர்பில் வேகமாக செயற்பட்டு வருகின்றன. காலம் சென்ற சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஆர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவை நிறுத்துவது தொடர்பில் ஐ.தே.க சிந்தித்து வருகையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவை நிறுத்துவது தொடர்பில் எதிர்த்தரப்பான மகிந்தா தரப்பு செயற்பட்டு வருகின்றது.

அதற்கு அமைவாக கோத்தபாய தனது அமெரிக்க குடியுரிமையையும் துறந்துள்ளதாக அவரின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்சா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட அவர் மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கே அவரின் குடியுரிமையை பறித்துள்ளது.

அதாவது 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான போரை ஆயுதவழிகளில் தோற்கடித்தபோது துட்ட கெமுனுக்காளாக தென்னிலங்கையில் போற்றப்பட்டவர்கள், தற்போது பதவி இழந்து, எதிர்க்கட்சியாகி, அமெரிக்க குடியுரிமை இழந்து தமிழ் மக்களின் வாக்குக்களுக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் அவர்களிடம் பேரம்பேசும் தகமையிலோ அல்லது அவர்களை மேலும் தண்டிக்கும் வலுவுடனனோ தமிழ் மக்கள் இல்லை என்பது தான் துன்பமானது. அதற்கான காரணம் சோரம்போன தமிழ் அரசியல் தலைமைகளும், தமக்கிடையே மோதிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்களும் தான்.

ஆனால் மகிந்த ராஜபக்சாவுக்கும் அவரின் சகோதரர் கோத்தபாயாவுக்கும் இந்த நிலை ஏற்பட்டதற்கு ஒரு சில தமிழ் அமைப்புக்களும், அவர்களுக்கு துணையாக செயலாற்றிய அனைத்துலக அமைப்புக்களும், சிறீலங்காவை மையம்கொண்டுள்ள பூகோள அரசியலுமே காரணம்.

Mannar protest 5 1 பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை - வேல்ஸ் இல் இருந்து அருஷ்தற்போதைய அரச தலைவர் தேர்தல் என்பது இந்த பூகோள அரசியலை மேலும் ஒரு சிக்கலான நிலைக்கு மாற்றவல்லது என்பதை மேற்குலகம் நன்கு அறியும். எனவே தான் கோத்தபாயாவை குறிவைத்துள்ளது அமெரிக்கா, அது மட்டுமல்லாது அடுத்த ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் தறபோதைய அரசின் கைகளை முறுக்கி “சோபா” என்ற படைத்துறை உடன்பாட்டில் கைச்சாத்திட வைக்கவும் அமெரிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னனியும் அதுவே, அதாவது தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் புதிய அரசு அதனை ஒன்றும் செய்ய முடியாது என்பது அமெரிக்காவின் கணிப்பு. ஆனால் அமெரிக்காவின் கணிப்பை இந்தியா தனது மறைமுக நடவடிக்கை மூலம் முறியடித்துவிட்டது.

mahi us பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை - வேல்ஸ் இல் இருந்து அருஷ்தற்போது தேர்தல் நெருக்கிவரும் வேளையில் மகிந்தா தரப்புடன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது பிரான்ஸ் அரசு. அமெரிக்கா தான் நேரிடையாக இறங்காது பிரான்ஸ் மூலம் ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது. அதற்கான காரணம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா அரசு ஆரம்பிக்கவுள்ள இந்துசமுத்திரத்தை கடந்து செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையமாகும்.

இந்த நிலையம் இயங்குமானால் அமெரிக்காவின் உதவியுடன் வளைகுடா பகுதியில் உள்ள துறைமுகங்களின் வர்த்தகம் வீழ்ச்சியடைவதுடன், அவற்றின் முக்கியத்துவமும் குறைந்துவிடும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தகப்போரிலும் சீனாவை பணியவைக்க அமெரிக்காவால் முடியவில்லை. மாறாக ஈரானிடம் தனது அதிநவீன உளவு விமானத்தை இழந்த அமெரிக்காவின் நடவடிக்கை தற்போது சீனா-ஈரான்-ரஸ்யா உறவுகளைப் பலப்படுத்தும் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவில் அடுத்த ஐந்து ஆண்டுகள் இடம்பெறவுள்ள ஆட்சி என்பது மேற்குலகத்திற்கு முக்கியமானது. ஆபிரிக்கா வரை சீனாவின் அதிகாரம் விரிவாக்கம் பெற்றுவந்தாலும் அதன் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான பிரவேசம் என்பது முன்னர் மியான்மார் ஊடாக மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் அதனை இலகுவாககியுள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் பலவீனம் சீனாவின் பணிகளை இலகுவாக்கியுள்ளது.

sri Ranil பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை - வேல்ஸ் இல் இருந்து அருஷ்தற்போது உள்ள இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை தமக்கு சாதகமாக தென்னிலங்கை அரசியலில் பயன்படுத்தும் வியூகங்கள் பூகோள அரசியல் போட்டியில் புதைந்துபோயுள்ள இந்த நாடுகளிடம் உண்டு. அதற்கு தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தும் திட்டத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

ஆனால் தென்னிலங்கையில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை, ஆனால் எமது வாக்குகளை கொண்டு எம்மை இந்த நாடுகள் ஏமாற்றுவதை நாம் தடுத்தாக வேண்டும். அதன்மூலம் தான் நாம் எமது அரசியல் பிரசன்னத்தை தென்ஆசியாவில் வெளிப்படுத்த முடியும்.

எனவே எதிர்வரும் அரச தலைவர் தேர்தலையும், அதனைத் தொடர்ந்துவரும் எல்லா அரச தலைவர் தேர்தல்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்கும் முடிவை மேற்கொள்ளவேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை தளத்திலும், புலத்திலும் தேசியம் சார்ந்தவர்கள் மேற்கொள்வதுடன், தமிழ் மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர்கள் ஆரம்பிக்க வேண்டும்.

தமது பிரச்சாரத்திற்கு சமூகவலைத்தளங்களை பயன்படுத்தப்போவதாக மகிந்தாவின் புதல்வர் நாமால் கூறியது போல நாமும் சமூகவலைத்தளங்களில் ஊடாக தற்போதே எமது விழிப்புணர்வு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு ஏதுவான தெளிவான சிந்தனைகளை எமது இளம் தலைமுறைகளிடம் நாம் தற்போதே விதைக்க வேண்டும்.

வியாழன் கோளுக்குள் ஊடுருவிய விண்கல்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக விளங்கும் வியாழன் கோளுக்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர், செலெஸ்டிரான் 8 தொலைகாட்டி மூலம் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் வியாழன் கோளின் இடதுபுறம், கீழாக வெள்ளை நிறப் புள்ளி ஒன்று தென்படுகின்றது. இது மிகப் பெரிய விண்கல் ஒன்று, வேகமாக கோளுக்குள் நுழைந்து செல்வதைக் காட்டுகின்றது. இது தொடர்பாக பதிவுகளை மேற்கொண்ட சாப்பல், ஒரேயொரு பிரேமில் வியாழன் கோளுக்கு ஏற்பட்ட பாதிப்பை திறமையாக பதிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 1994ஆம் ஆண்டு வியாழன் கோளை எஸ்.எல்.9 என்ற விண்கல் தாக்கியது படம்பிடிக்கப்பட்டது. இது சூரியனின் மேற்பரப்பைவிட அதிகம் வெப்பம் நிறைந்ததாகும்.

இதனை வானியல் அறிஞர் டாக்டர் ஹெய்டி பி. ஹாம்மெல் ஹப்பிள் தொலைக்காட்டி மூலம் படம் பிடித்திருந்தார். இவர் தற்போது சாப்பலின் கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

 

கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு 11.08 இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைமையை ஏற்று மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயா ராஜபக்ஸவை மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

தான் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுள்ளார்.

முதலில் நாடளாவிய ரீதியில் மத அனுஸ்டானங்களில் பங்கு பற்றவுள்ளார். இதன் போது அவரின் பாதுகாப்பிற்காக முன்னாள் இராணுவ அதிகாரி தலைமையில் தொண்டர் படை ஒன்று அமைக்கப்படும். அத்துடன் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஐம்பது இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தனது பாதுகாப்பு பிரதானியாக யோசித ராஜபக்ஸ செயற்படுவார்.

Jaffna gota கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனேயே களனி ரஜமகா விகாரைக்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் பேலியகொட வித்ியாலங்கா பிரவேனாவிற்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

மறுநாள் (12.08) அநுராதபுரம் ருவான் வெலிசயவிற்குச் சென்று அங்கு உடுவே தம்மலோக தேரரால் நடத்தப்படும் வழிபாட்டில் கல்து கொள்வார். மறுநாள் (13.08) ஸ்ரீமகாபோதியை தரிசிக்கவுள்ளார். அத்துடன் கண்டிக்கு செல்கின்றார். 14.08இல் கண்டிக்கு சென்று மல்வத்து, அஸ்கிரிய மற்றும் நிக்காய மகா நாயக்கர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்வார். பின்னர் 15.08 கதிர்காமத்திற்கு செல்லவுள்ளார். அன்று மாலை கிரிவெலவில் 84ஆயிரம் விளக்குப் பூஜைக்கு ஏற்பாடு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் கதிர்காம மகா தேவாலயத்தில் நடைபெறவுள்ள சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் பங்குபற்றவுள்ளார்.

அதன் பின்னர் திஸ்ஸமகாராமய மற்றும் தேவிநுவர தேவாலயத்திற்கும் சென்று அதன் பின்னர் கொழும்பு நோக்கி பயணமாவார்.

இதற்கிடையில் கோட்டபயா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் மகிந்தா தரப்பு ஆதரவாளர்களும் ஒட்டுக் குழுக்களும் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலும் மலையகத்தின் அனேக பகுதிகளிலும் வெடிகொழுத்தியும், பாற்சோறு பரிமாறியும் கொண்டாடியுள்ளனர்.

யாழ். திருநெல்வேலி பகுதியில் இளைஞர்கள் வெடி கொழுத்தி கோட்டபயாவின் படம் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டபயாவின் பாதுகாப்பு பிரதானியாக வரப்போகும் யோசித ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்ஸவின் மகனாவார். இவர் முன்னாள் கடற்படை வீரராவார். 2006ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டார். அடிப்படைப் பயிற்சிகள் எதுவும் இல்லாது, கடற்படையில் லெப்டினன்ட் ஆக பதவியேற்றார். இவரின் பயிற்சிக்குரிய செலவுகள் அனைத்தையும் மகிந்த ராஜபக்ஸவே அரசாங்க செலவிலிருந்து வழங்கியிருந்தார். பின்னர் மகிந்த ராஜபக்ஸவின் உதவியாளராக பணியாற்றினார்.

2015 மகிந்த தேர்தலில் தோல்வியடைந்து மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த போது, இவரின் தகுதிகளை புறக்கணித்து,இவரை கடற்படையிலிருந்து பதவி நீக்கம் செய்தார்.

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தபாயா வேட்பாளராக அறிவிப்பு

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா போட்டியிடுவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

சுகததாசா அரங்கில் இடம்பெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தின் அதன் தலைவரும், கோத்தபாயாவின் சகோதரருமான எதிர்க்சட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா வேட்பாளரை அறிவித்துள்ளார்.

அட்சியின் தலைவராக மகிந்தாவை முன்னள் அமைச்சரும், முக்கிய உறுப்பினருமான ஜி.எல் பீரீஸ் அறிவித்துள்ளார்.

இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்

மனிதன் – மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு இனக்குழுமத்திற்கு தாம் பூர்வீகமாய் வாழ்ந்து வரும் நிலத்துடன் உள்ள தொடர்பானது வாழ்வடன் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளது. 1990 இல் வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் 2006 இல் சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் ஒரே விடயத்தைத்தான் கூறுகிறார்கள்.

நீங்கள் எங்களுக்கு நிவாரணம் தரவேண்டாம். எங்களை வேறு இடத்தில் குடியேற்றி வீடு கட்டித் தரவேண்டாம். எங்களை எங்களுடைய சொந்த இடத்திற்கு போக விடுங்கள். ஒரு கொட்டிலைப் போட்டு கஞ்சியைக் குடித்தாவது சீவிப்பம்.”

மனிதனுக்கும் அவனது பூர்வீக நிலத்துக்கு மிடையிலான ஆத்மார்த்தப் பிணைப்பானது மேற் கூறப்பட்ட மக்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒரு இனம் தாம் பாரம்பரியமாய் வாழ்ந்த மண்ணில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்களைத் தன்னகத்தே காலங்காலமாகத் தேக்கி வைத்திருக்கும். புறத்தே நேரடியாகக் காணமுடியாத ஒரு வளம் நிலத்தில் – பூர்வீகக் காணியில் இருப்பதை சம்பூரில்‚ வலிகாமத்தில்‚ கேப்பாப்புலவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உணர்கிறார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிப்பதென்பது அவர்களது வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமமாகும்.

இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் 2500 வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகும். சிங்களவர்களுக்கு சார்பாக எழுதப்பட்ட மகாவம்சமோ அல்லது இலங்கைத் தமிழரின் சரித்திரத்தை விபரிக்கும் எந்த ஒரு வரலாற்று நூலுமோ கிழக்கிலங்கையையோ‚ வன்னிப் பகுதியையோ அல்லது யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தையோ எந்த ஒரு சிங்கள அரசனும் ஆண்டதாக சரித்திரத்தில் குறிப்பிடவில்லை.

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களது பாரம்பரிய நிலம் தமிழினப் படுகொலைகளின் ஊடாகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி பூர்வீகக் காணியில் இருந்து வெளியேற்றியதன் மூலமும் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

குறிப்பட்ட ஒரு சமூகக் குழுமம் தன்னை ஒரு தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு அக் குழுமத்திற்குத் தனித்துவமான மொழி‚ வரலாறு‚ இலக்கியம்‚ கலைகலாசார பின்னணி என்பவற்றுடன் தொடர்ச்சியான நிலப்பரப்பும் அந் நிலப்பரப்புடன் வரலாற்றுத் தொடர்பும் இருத்தல் வேண்டும் என்று மேற்குலக இனவியல் வரலாற்றாசிரியர்கள் வரையறுத்துள்ளனர். தாயக்கோட்பாடு என்ற கருத்தியல் இதிலிருந்தே எழுந்தது. தமிழனத்தின் தனித்துவத்தை இல்லாதொழித்து‚ தங்களைத் தாங்களே ஆளும் சுயநிருணயத்தை கோரமுடியாத சிறுபான்மை சமூகமாக்கி‚ தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் நோக்குடன் வடக்குக் கிழக்கை இணைக்கும் எல்லைக் கிராமமான மணலாற்றை விட்டு தமிழர்களை விரட்டி வெலிஓயா என்ற சிங்களக் குடியேற்றத் திட்டம் 1980 இல் உருவாக்கப்பட்டது.

தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டை சிதைத்து இலங்கைத் தீவானது‚ கௌதம புத்தரால் சிங்களவர்களுக்கு அர்ப்பணிக்கபட்ட பூமி என்ற மகாவம்ச மாயாவாத சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களமயமாக்குதலை நோக்காகக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் 1949 முதல் உருவாகத் தொடங்கின.

1949 இல் தொடங்கி 2014 பெப்பிரவரி வரை நின்று பார்க்கையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமளவுக்கு (Ethnic Cleansing)  தமிழ் நிலத்தில் – வடகிழக்கில் நிலமானது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு குடிப்பரம்பலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு புறம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழினம் 1949 இலிருந்து தனது நிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் படிப்படியாக இழந்து வர மறுபுறம் ஏறத்தாழ 250 வருடங்களாக அரை அடிமைகளாக வாழும் மலையகத் தமிழினம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் திட்டமிட்ட இனக் கலவரங்களாலும் தமது பூர்வீக நிலத்தின் மீதான இருப்பையும் உரிமையும் இழந்து வருகிறது.

Budda colonisaton இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழினம் தனது இருப்பை‚ நிலத்தின் மீதான உரிமையை முழுமையாக இழந்துள்ளதுடன் கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இன்று‚ 2009 மே மாதமளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதபலம்  அழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள இராணுவத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது.

காலங்காலமாக காணி அபிவிருத்தித் திட்டம் (Land Development Schemes) என்ற போர்வையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள். கிராம விரிவாக்கம்‚ இளைஞர் அபிவிருத்தி‚ விவசாய மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி‚ மீன்பிடி அபிவிருத்தி என்ற வெவ்வேறு பெயர்களில் தமிழர் மரபுவழித் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றினார்கள்.

  1. கல்லோயாக் குடியேற்றத் திட்டம்

தமிழர் தாயகத்தில் – கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர்  டி.எஸ்.சேனனாயக்க. இவர் 1931 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சிக்காலப்பகுதியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தவர். தமிழர்கள் பூர்வீகமாய் வாழ்ந்து வந்த பட்டிப்பளை‚ களுவாஞ்சிக்குடி‚ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களின் எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து கல்லோயா என்று பெயரிட்டு கல்லோயா பள்ளத்தாக்கு சிங்களக் “கொலனி” 1949 இல் உருவாக்கப்பட்டது. பட்டிப்பளை என்ற புராதன தமிழ்க் கிராமத்தின் பெயரே கல்லோயா என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. இக் குடியேற்றங்களுக்காக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளின் நிதியுதவி பெறப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் 1949 – 1952 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் 80‚000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். 1960 வரை இத்திட்டம் விஸ்திரிக்கப்பட்டது.

Vavuniya Barathypuram இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்கல்லோயா குடியேற்றத் திட்டம் இங்கினியாகல என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு ஆரம்பத்தில் சிங்களவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரே இருந்தனர். 1952 ஜுலை 13 ஆம் திகதி இங்கிருந்த 100 இற்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை குடியேற்றத் திட்டத்திற்கு இடம்பெயருமாறு இராணுவத்தினர் வற்புறுத்தி அவர்களது வீடுகளை எரித்து அழித்தனர். ஆனால் அவர்கள் குடியமர மாற்று நிலம் எதுவுமே வழங்கப்பட வில்லை. அதே நேரம் சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்கள் இருந்த இடம் குடியமர வழங்கப்பட்டதுடன் ஒவ்வோரு குடும்பத்திற்கும் ரூபா 10000 உதவித் தொகை வழங்கப்பட்டது.  67 வருடங்களுக்கு முன்னர் இது மிகப் பெரிய தொகையாகும். கல்லோயா குடியேற்றத்தைத் தொடர்ந்து திருகோணமலை கந்தளாயில் சிங்களக் கொலனி உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வர இனவிகித அடிப்படையில் இங்கு தமிழர்களுக்கும் காணி வழங்கப்பட்டிருந்தது. 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாகத் தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொழும்பிலும் தமிழர்கள் வாழும் தென்னிலங்கையின் பகுதிகளிலும் மலையகப் பகுதியிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் பரவின. 1956 இல் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் முதல் இலக்காக கல்லோயா மற்றும் கந்தளாய்ப் பகுதியில் பூர்விகமாய் இருந்த மற்றும் குடியேறிய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழினத்தின் மீது முதலாவது பாரிய இனப்படுகொலை இங்கினியாகலவில் ஜுன் 5‚ 1956 இல்  சிங்கள ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டது. கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் இங்கினியாகலவில் உள்ள கரும்புத் தோட்டத்திலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ய குடியேற்றப்பட்ட 150 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் எரிக்கப்ட்டு தடயமின்றிச் செய்யப்பட்டார்கள். தாசி விதாச்சி தனது ‘அவசரகாலம் 58’ (Emergency 58) இல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தடயங்களை அழித்தல் 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் நிகழவில்லை. 1956 இலேயே ஆரம்பமாகிவிட்டது. 1996 செம்மணியில் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்கா 600 இற்கும் அதகமான தமிழ் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகளை நள்ளிரவில் வாகன வெளிச்சங்கள் மூலம் தோண்டி எலும்புக் கூடுகளை அகற்றி தடயமே இல்லாமற் செய்தார்.

  1. இனக் கலவரங்ளும் அனுராதபுரத்திலிருந்து தமிழர் வெளியேற்றமும்

1956 ஐத் தொடர்ந்து 1958‚ 1977‚ 1978‚ 1981‚ 1983 என தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் மலையகப் பகுதியிலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் தமிழர்களுக்கு உரிமையான நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதற்காக இனஅழிப்பை நோக்காகக் கொண்டு ஆயுதப்படைகளின் உதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. எல்லைக் கிராமங்களிலும் சிங்களவர் மத்தியிலும் வாழ்ந்த தமிழர்கள் இக்கலவரங்களின் போது நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து  வெளியேற்றப்பட்டார்கள்; பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

black july இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்1983 ஆடிக்கலவரம் இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தியது. தமிழர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றனர். 1983 இல் இலங்கையின் தலைநகரில் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறையில் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மலையகத்திற்கும் அனுராதபுரம் பொலநறுவை முதலான தமிழர் பிரதேசங்ளுக்கும் பரவியது.

இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றியபோது அனுராதபுரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆங்கில கப்பற் தலைவனான றொபேட் நொக்ஸ் (Robert Knox (8 February 1641 – 19 June 1720)) இலங்கையில் கிழக்கிந்தியக் கம்பனியின் வியாபாரத்தை முன்னெடுக்க வருகைதந்த போது கண்டி அரசனான இரண்டாம் இராஜசிங்கனின் காவலர்களால் கைது செய்யப்பட்டு கண்டி அரசின் கைதியாக 19 வருடங்கள் வாழ்கிறான். றொபேட் நொக்ஸ் கைதியாகவிருந்த போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்கிறான். 19 வருடங்களின் பின் ஒருநாள் கண்டி இராச்சியத்திலிந்து தப்பி அனுராதபுரம் வழியாக வருகின்ற போது தான் கைதியாகவிருந்த போது கற்ற மொழியை விடுத்து வேறு ஒரு மொழியில் அப்பிரதேச மக்கள் உரையாடுவதையும் சிங்கள மொழியில் தான் பேசியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் தனது வரலாற்றுக் குறிப்பில் எழுதியுள்ளான். அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்களை மலபார் என்று பெயரிடுகிறான். மலபார் என்பது தமிழர்களைக் குறிக்கும் சொல். 17 நூற்றாண்டு இலங்கையின் வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணமாக “கிழக்கிந்தியக் கம்பனியின் இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்புகள்” (Knox, Robert (1681). An historical relation of the island Ceylon, in the East Indies. Printed by R. Chiswell.LCCN 15012033) என்ற நூல் விளங்குகின்றது. பிரித்தானியர் வருகைக்கு முன் அனுராதபுரதத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். 1983 கலவரத்துடன் தமிழர்கள் முற்றாகவே அனுராதபுரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அனுராதபுரம் இலங்கையின் மிகப் பெரிய மாவட்டம். 2200 வருடங்களுக்கு முன்னர் மகாவம்சம் போற்றும் தமிழரசனான எல்லாளன் ஆட்சிசெய்த தமிழ்நிலம். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இடம். காலங்காலமாக மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவுக் கலவரங்கள் மூலம் சிங்களவர்களின் கைக்குமாறியது.

  1. மட்டக்களப்பு – அம்பாறை இனப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

இலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களின் சதவீதம் 3 மடங்கால் அதிகரிக்க தமிழர் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மாற்றமின்றியிருந்தமையை புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன. 1963 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பாக 1961 இல் 7002 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4500 சதுர கிலோமீற்றர் நிலமானது பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 15000 சிங்களக் குடும்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை  மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழரது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்த இரு நீர்ப்பாசனத் திட்டங்களும் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களது பயன்பாட்டுக்கே வந்தன.

1881 – 1981 வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட குடிப்பரம்பல்களின் தரவு

Singala colonisation East இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்2007 இல் உள்ள தரவுகளின்படி அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 60 சதவீதமாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 30 சதவீதமான நிலத்தையே உரிமையாகக் கொண்டிக்க சனத்தொகையில் 30 சதவீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் 70 சதவீதமான நிலத்தை உரிமையாகக் கொண்டிருக்கின்றமையக் காணலாம்.

இன்று 2009 மே இற்குப் பின்னர்  அம்பாறையில் சிங்களவர்கள் முஸ்லீம்களின் காணிகளை அத்துமீறிக் கைப்பற்றி வர அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் சிங்களவர்களை எதிர்க்காமல் தமிழர்களின் காணிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.

மகிந்தா பக்கம் திரும்பும் மேற்குலகம் – கருணை காட்டுவாரா மகிந்தா?

சிறீலங்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஸபக்சாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி தெப்லிஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரீஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மேற்குலகம் பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாயா வருவதை மறைமுகமாக எதிர்த்த அமெரிக்கா அவர் மீதான வழக்குகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்தது.

ஆனாலும் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ள கோத்தபாய அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் மகிந்தா தரப்பை தன்னவசப்படுத்தம் காய்நகர்த்தல்களை மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றது.

அதற்கு ஏதுவாக கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் இராஜதந்திரி ஒருவர் மகிந்தாவை தனியாக சந்தித்திருந்தார். இந்த சந்திப்புக்களை பீரீஸ் மறைமுகமாக ஏற்பாடு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.