Home Blog Page 3026

போர்க்குற்றவாளியின் நியமனத்திற்கு இந்தியா அங்கீகாரம்

இந்திய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்ட் 25 – 29 வரை இடம்பெறும்  கல்விச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர்.

இந்தப் பிரதிநிதிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் அவர்கள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இம்மாதம் 26ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தலைமையதிகாரி மற்றும் பிரிகேடியர் நவ்பிரீட் சிங் அளங் ஆகியோரை சிறிலங்கா இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா வரவேற்று இராணுவத் தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற உயரதிகாரிகள் இராணுவத் தளபதியை  சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.

இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூராஜ் பங்ஷஜயா, கருத்தரங்கிற்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி உயரதிகாரிகளுக்கு இராணுவத்தின் தற்போதைய பதவிகள் மற்றும் பணிகளை விளக்கினார். பின்னர் இந்த உயரதிகாரிகள் குழுவினர் பத்தரமுல்லவில் அமைந்துள்ள இந்திய சமாதான படையணி நினைவுத் தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களை நினைவுபடுத்தி தங்கள் கௌரவ அஞ்சலிகளை செலுத்தினர்.

அதன் பின்னர் இந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் விமானப்படைத் தளபதியைச் சந்தித்தனர்.

இந்த தூதுக் குழுவில் இராணுவம், கடற்படை, இந்திய ஆயுதப்படைகளின் விமானப்படை அதிகாரிகள், பங்களாதேஸ் ஆயுதப்படைகள், பூட்டான் ஆயுதப்படைகள் சவூதி அரேபிய ஆயுதப்படைகள் மற்றும் பதினொரு துணைவர்கள் அடங்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே லெப். ஜெனரல் சவேந்திர சில்வா என்ற போர்க்குற்றவாளியின் நியமனத்திற்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், ஐநாவும், மேற்குலக நாடுகளும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ள நிலையில் இந்தியா தனது படை அதிகாரிகளை அனுப்பி அவரை சந்தித்து வருவது அவருக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது.

 

தமிழகத்தை புறம்தள்ள இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகள் திட்டம்

பலாலி விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியளவில் இந்தியப் பிராந்திய நகரங்களுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், பலாலியிலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறாது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கும் போது, நான்கு இந்திய நகரங்களுடனான இணைப்புக்களைக் கொண்ட இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாறும். இருந்தாலும் தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு பலாலியிலிருந்து விமான சேவைகள் நடைபெற மாட்டாது.

2.5 பில்லியன் செலவில் புனரமைக்கப்படும் பலாலி விமான நிலையத் திட்டத்திற்கு 300 மில்லியனை இந்தியா வழங்குகின்றது.

ஒக்டோபர் 15இல் விமான நிலையம் திறக்கப்படும் போது, சிறிய வணிக விமானங்கள் பெங்களுர், கொச்சி, முப்பை மற்றும் ஹைதரபாத் ஆகிய நகரங்களிற்கு சேவையை ஆரம்பிக்கும்.

 

 

 

 

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் – தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு.

அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும்  கையளிக்கப் பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது.  இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருப்பதைதான் இந்த நாளில் உணர வேண்டும்.

இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர் கலாநிதி த. ஜீவராசா எழுதியிருந்தார். அந்த அடிப்படையில்தான் இராவணனை இலங்கேஸ்வரன் என்கிறோம். கம்பராமாயணமும் அப்படிச் சித்திரிக்கிறது. ஒரு காலத்தில் இலங்கேஸ்வரர்களாக ஈழத்தை ஆண்ட தமிழினம் பின்னர், சிறுபான்மை இனமானது. இலங்கையில் இரண்டு சம அந்தஸ்துள்ள நாடுகள் அமையக் கூடிய சூழல் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஏற்பட்ட போதும் நல்லிணக்கம் பேசி அவ் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

வடக்கு கிழக்கு சிறுபான்மை தமிழர்கள் ஆக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள், இன்றைக்கு வடக்கு தமிழர்கள் என்கின்ற அளவில் கிழக்கின் சிங்கள மற்றும் இஸ்லாமியவாதக் குடியேற்ற சூழல்கள் தள்ள முற்படுகின்றன. தமிழீழமே இன்றைக்கு சுருங்கிப் போயிருப்பதைப் போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழம் குறித்து பேசும் ஒரு சிங்கள பேரினவாதிகூட வடக்கு கிழக்கிற்கு அதிகாரம் தரமாட்டோம் என்று சொல்லுவார். இன்று வடக்கிற்கு அதிகாரத்தை தர ஒரு போதும் இடமிளிக்கோம் என்று பேசப் பார்க்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த பெரும்பாலான நிலங்கள் இன்று காணாமல் ஆக்கப்பட்டுவிட்டன. எமது தலைமைகள் ஆளும் சிங்கள அரசை காப்பாற்றுகின்றன. மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தினோம். அவரது ஆட்சியை தொடர்ந்து பாதுகாக்க உதவுகிறோம். சர்வதேசத்தை துணைக்கு அழைத்துவிட்டு, அதன் பிடியிலிருந்து தப்பவும் நாமே உதவிக் கொண்டிருக்கிறோம்.ranil sampanthan 1 காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் - தீபச்செல்வன்

மைத்திரியுடன் ரணிலுக்கு முரண்பாடு. ரணிலை நாம் காப்பாற்றுகிறோம். ரணில் அரசு இன்றைக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஒரு புறத்தில் தமிழ் தலைமைகளின் ஆதரவை பெற்றுக் கொண்டு மறுபுறத்தில் தமிழர்களின் உரிமைகளையும் பண்பாட்டு அம்மசங்களையும் திருடும் காணாமல் ஆக்கும் வேலையை சிங்கள அரசும் அதன் தலைவரும் பிரதமரும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நாளின் பெரும் சூத்திரதாரிகளும் இந்த நாளின் எதிரிகளுமே இலங்கை ஆட்சியாளர்களைப் போன்றவர்கள்தான்.

மணலாறு என்ற ஈழத் தமிழர்களின் பிரதேசத்தை காணாமல் ஆக்கி, வெலி ஓயா உருவாக்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்காகவே ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் சூழலே ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு வந்து இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆமையன் குளம் என்ற தமிழ் குளத்தை காணாமல் ஆக்கிவிட்டு, அதை சிங்களக் குளமாக்கி திறந்து வைத்துச் செல்கிறார்.

10619 1 காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் - தீபச்செல்வன்ஈழ இன விடுதலைக்கான போராட்டம் இலங்கை தீவில் நடந்தது. அதனை சிதைக்க தமிழ் இன அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டது. இவ்வளவு நடந்த பின்னரும், வவுனியா ஒதியமலையை அண்டிய பகுதியில் நாளும் பொழுதும் ஒரு சிங்களக் குடி குடியேறிக் கொண்டிருக்கின்றது. யாரோ ஒரு பிக்கு வந்து புத்தர் சிலையுடன் குடி ஊன்றிக் கொண்டிருக்கிறார்.

செம்மலையில் இந்து ஆலய வளாகத்தை அடாத்தாக பிடித்து, பௌத்த சிங்களப் பிக்கு பாரிய புத்தர் சிலை கட்டி விகாரை அமைக்கிறார். வடக்கு கிழக்கில் ஆயிரம் இடங்களில் புத்தர் சிலைகளை அமைக்க சனாதிபதி சிறிசேனதான் திட்டம் தீட்டியவர். இதனால்தான் கன்னியாவில் பாரிய நெருக்கடி உருவாகியது. அங்குள்ள இந்து ஆலய நிலத்தில், விகாரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டாலும் அரசாணைப்படியும் அதிகாரபூர்வமற்ற முறையிலும் குடியேற்ற முயற்சிகள் வேறு இடங்களில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

ஆகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம். போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகின்றன. வருடம் தோறும் இந்த தினத்தை நினைவு கொள்கிறோம். போராட்டங்கள் செய்கின்றோம். தலைவர்கள் அறிக்கைகளை விடுகின்றனர். எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதுகிறோம். கவிஞர் கவிதைகளை எழுதுகிறோம். இந்தப் பத்தாண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் என்ன முன்னேற்றம் நடந்தது? அந்த மக்கள் இன்றும் தெருவில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடிப் போராடியே செத்துக் கொண்டிருப்பதுதான் நடந்தது.

ஒன்று மாத்திரம் நன்றாகப் புலப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள். imageproxy 1 காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் - தீபச்செல்வன்

ரணிலும் மைத்திரியும் முரண்படுகின்றனர். ரணிலும் மகிந்தவும் முரண்படுகின்றனர். மைத்திரியும் கோத்தாவும் முரண்டுகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. சிங்கள இராணுவத்தின், சிங்கள அரசுகளின் இனப்படுகொலைக் குற்றங்களை பாதுகாப்பதில் மிக கச்சிதமாக, மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள் போராடுவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. துளியும் குற்றமில்லை.

அவர்கள் இதைத்தான் எண்ணுகின்றனர் போலும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடுகின்ற தாய் – தந்தையர்களும் மெல்ல மெல்ல காணாமல் ஆகிப் போவார்கள். அப்போது கேள்வி எழுப்ப எரும் இருக்க மாட்டார்கள் என்று.

இதே விடயத்தைத்தான் எல்லா இடத்திலும் சிங்கள அரசு பிரயோகிக்கிறது. நாம் நிலத்தின் அதிகாரத்தை கேட்கிறோம். அவர்கள் தொடர்ந்து நிலத்தை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது கடலைக் கோருகிறோம். அவர்கள் கடலை காணாமல் ஆக்குகிறார்கள். நாம் நமது காட்டை கோருகிறோம் அவர்கள் காட்டை காணாமல் ஆக்குகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் காணாமல் ஆக்குவதைத்தான் தீர்வாகக் கொண்டுள்ளனர்.

இப்போது நாங்கள் ஆலயத்திற்கு பெரிதாக செல்வதில்லை. நல்ல தருணம். அவர்கள் ஆலயங்களை காணாமல் ஆக்கி புத்த விகாரைகளை கட்டுகிறார்கள். நாம் பண்பாட்டு உணர்வு உரிமையை மறந்துவிடுகிறோம். அவர்கள் அதனையும் காணாமல் ஆக்குகிறார்கள். எங்களை பக்கத்தில் வைத்திருந்தபடி, எங்களை துணையாக்கிக் கொண்டே எங்களை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஒன்றுபட்ட இலங்கையைப் பேசிக் கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில் இந்த நாளில் ஒட்டுமொத்தமாக காணாமல் போனோர் என்றொரு இனமாக ஈழத் தமிழரையும் நினைவு கூர வேண்டிய நிலை வரும். இதே நிலை தொடர்ந்தால் ஈழம் என்றொரு காணாமல் போன நிலத்தையும் நினைவுகூர வேண்டி வரும். காணாமல் போன ஒரு தாயின் வலியை உணர்தலும் அதற்காய் இயங்குதலும்தான் இந்த நிலையை இல்லாமல் செய்யும் முதல் புள்ளியாய் இருக்கும்.

கூட்டமைப்பு – மைத்திரி சந்திப்பு ; எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காத சிறிலங்கா சனாதிபதி

இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து இரா­ணு­வமே இறுதி தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் பாது­காப்பு படைகள் வச­முள்ள காணிகள் எவை என் ­பது குறித்து கூட்­ட­மைப்­பினர் எழுத்­து­மூல அறிக்­கையை தர வேண்டும் என்றும்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருடன் நேற்று இடம்­பெற்ற சந்­திப்­பின்­போது  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்டமைப்பு தெரி­வித்­துள்­ள­துடன் இடை நடுவே பேச்­சு­வார்த்­தையை விட்டும் வெளி­யே­றி­யி­ருக்­கிறார்.

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   தலை­மையில் அரச அதி­கா­ரிகள் பாது­காப்பு தள­ப­திகள் மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பங்­கேற்ற  இந்த  சந்­திப்பு எந்­த­வித ஆரோக்­கி­ய­மான முன்­ன­கர்­வு­களும் இல்­லாது முடி­வுக்கு வந்­த­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  பொறுப்­ பு­ணர்­வுடன் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொள்­ள­வில்லை என சந்­திப்பில் கலந்­து­கொண்ட கூட்­ட­மைப்­பினர் தெரி­வித்­தனர்.

வடக்கில்  இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­வித்தல் மற்றும் மகா­வலி அதி­கா­ர­சபை, வனப்­பா­து­காப்பு திணைக்­களம், தொல்­பொ­ரு­ளியல் திணைக்­க­ளங்­களின் மூல­மாக வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நில ஆக்­கி­ர­மிப்பு விட­யங்கள் குறித்து  ஆராயும் நோக்கில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு நேற்று காலை ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.  இதில்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சார்பில் மாவை சேனா­தி­ராஜா, ஸ்ரீதரன், சார்ல்ஸ் நிர்­ம­ல­நாதன், சர­வ­ண­பவன், சிவ­சக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராச ஆகியோர் மாத்­தி­ரமே கலந்­து­கொண்­டனர்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் முற்­பகல் 11 மணி­ய­ளவில்  இந்த சந்­திப்பு இடம்­பெற்ற நிலயைில் கூட்டம் ஆர­மிக்­கப்­பட்டு சில நிமி­டங்­களில் வேறு அலுவல் ஒன்­றுக்­காக ஜனா­தி­பதி கூட்­டத்தை விட்டு வெளி­யே­றி­ய­துடன் பாது­காப்பு அதி­க­ரிகள் அரச அதி­கா­ரிகள் மட்­டுமே கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தனர்.

நீண்ட நேர­மாக அரச அதி­கா­ரி­க­ளிடம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திய கூட்­ட­மைப்­பினர் அதி­ருப்­தி­யுடன் இருந்­த­துடன் சில வாக்­கு­வா­தங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.ஸ்ரீதரன் இந்த கூட்­டத்தில் ஆக்­க­பூர்­வ­மான நோக்­கங்கள் ஒன்றும் இல்லை எனவும், ஜனா­தி­பதி பொறுப்­பில்­லாது நடந்­து­கொள்­வ­தாக கூறி இடை நடுவே கூட்­டத்தை விட்டு வெளி­யே­றி­யி­ருந்தார். நீண்ட நேரத்தின் பின்னர் மீண்டும் கூட்­டத்­திற்கு வந்த ஜனா­தி­பதி சிறிது நேரம் கலந்­து­ரை­யா­டிய நிலையில் நீண்ட நேர­மாக பேசி­விட்டோம் கூட்­டத்தை முடித்­துக்­கொள்­ளலாம் என கூறி வெளி­யே­றி­யுள்ளார்.

எவ்­வாறு இருப்­பினும் இந்த சந்­திப்பில் கூட்­ட­மைப்­பினர் தமக்கு ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திக்­கக்­கி­டைத்த நேரத்தில் முக்­கி­ய­மான கார­ணி­களை எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர். இதன்­போது வடக்கில் பாது­காப்பு படைகள் வசம் தொடர்ந்தும் தக்­க­வைத்­துள்ள காணிகள் குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்­தினர்.

வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பாது­காப்பு படை­யினர் பொது­மக்­களின் காணி­களை வசப்­ப­டுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக கேப்­பா­பி­லவு பகு­தியில் இப்­போதும் பொது­மக்­களின் 72 ஏக்கர் காணிகள் பாது­காப்­பு­ப­டைகள் வசம் உள்­ளன. மன்னார் மாவட்­டத்தில் அதி­க­ள­வி­லான காணிகள் இரா­ணுவம் தன்­வ­சப்­ப­டுத்­தி­வைத்­துள்­ளது. பொது­மக்கள் காணிகள் என கடந்த 2008ஆம்  ஆண்டில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வினால் வர்த்­த­மா­னி­ப­டுத்­தப்­பட்ட காணிகள் கூட இன்­னமும் விடு­விக்­கப்­ப­டாது உள்­ளன. இவை குறித்து எந்­த­வொரு முன்­னர்­வு­களும் இன்­னமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும். மகா­வலி அபி­வி­ருத்தி சபை மற்றும் வனப்­பா­து­காப்பு திணைக்­களம் என்­பன தொடர்ந்தும் காணி­களை அப­க­ரித்து வரு­கின்­றது என்­ப­தையும்  மன்னார் மாவட்ட எம்.பி சார்ல்ஸ் நிர்­ம­ல­நாதன் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார்.

அதே­போன்று   கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளிலும் இவ்­வாறு காணிகள் இரா­ணுவம் வசம் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஏழு தலை­மு­றை­யாக பொது­மக்கள் வச­மி­ருந்த காணி­களை இன்று எவ்­வாறு இரா­ணு­வத்தின் காணிகள் என உரி­மை­கோர முடியும். இவை  நியா­ய­மான கருத்­துக்கள் அல்ல. அதே­போன்று  மகா­வலி அபி­வி­ருத்தி என கூறிக்­கொண்டு புதி­தாக காணி­களை தன்­வ­சப்­ப­டுத்தும் வர்த்­த­மா­னிகள் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை குறித்து ஜனா­தி­பதி கவனம் செலுத்த வேண்டும் என்ற கார­ணி­களை  ஸ்ரீதரன் எம்.பி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதே­வேளை கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தொடர்ந்தும் எமது மக்கள் போரா­டிக்­கொண்டு இருக்க முடி­யாது ஆகவே ஒரு உறு­தி­யான பதில் வேண்டும் என்ற கார­ணி­களை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராச சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அதேபோல் மாவை சேனா­தி­ராஜா எம்.பியும் மயி­லிட்டி, பலாலி பகு­தி­களில் காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார். மயி­லிட்டி பிர­தே­சத்தில் 1500 குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளமை குறித்தும் மாவை சேனா­தி­ராஜா எம்.பி எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார்.

எனினும் காணி விடு­விப்பு விவா­க­ரத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பல கார­ணி­களை முன்­வைத்தும் ஜனா­தி­பதி அதற்­கான அக்­கறை செலுத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை என்ற கருத்­தினை  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சார்பில் கலந்­து­கொண்ட உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

வடக்கில் படை­யினர் வச­முள்ள காணிகள் என்ன என்­ப­தையும் எத்­தனை ஏக்கர் காணிகள் உள்­ளன என்­ப­தையும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் எழுத்து மூலம் அறி­வித்தால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என்­பதை ஜனா­தி­பதி கூட்­டத்தின் போது தெரி­வித்­துள்ளார். அத்­துடன் இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­விக்க முடி­யுமா முடி­யாதா என்­பதை இரா­ணு­வமே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் வடக்கில் இரா­ணுவம் வச­முள்ள காணிகள் குறித்த இறுதி நிலைப்­பாட்டை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முதலாம் திக­திக்கு முன்னர் பாது­காப்பு தரப்­பினர் தனக்கு அறி­விக்க வேண்டும் என்றும்  ஜனா­தி­பதி கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார்.

மயி­லிட்டி பலாலி காணி விவா­க­ரத்தில் உரிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாது­காப்பு அதி­கா­ரிகள் நேரில் சென்று நிலை­மை­களை பார்­வை­யிட்டு ஒரு முடி­வினை எடுக்­கு­மாறும் ஜனா­தி­பதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஏனைய காணிகள் குறித்த விவகாரங்கள்   தொடர்பில்  ஆராய எதிர்வரும் 12 ஆம் திகதி வடக்கு ஆளுநருடன் சந்திப்பொன்று  ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த அந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருக்கவில்லை என்பதையும் பல தடவடிகைகள் வடக்கின் காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதிக்கு உரிய காரணிகளை தெரிவித்தும் எழுத்துமூலம் கேட்பது வேடிக்கையான ஒன்றாகவும் எம்மீது அவருக்கு அக்கறை இல்லை என்பதையுமே வெளிப்படுத்தியுள்ளது எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை .

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் – தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வளரிவான் .

10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் .

72 நாடுகளில் இருந்து 541 பேர் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

நன்றி: பி.பி.சி

மகாவலி அபிவிருத்தி நில ஆக்கிரமிப்பை எதிர்த்து முல்லைத்தீவில் பேரணி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (28.08) காலை 10 மணியளவில் ஒன்றுகூடி ஆரம்பித்த கவனயீர்ப்புப் வேரணி முல்லைத்தீவு நகர் வழியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பேரணியை மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு மாவட்ட செயலக வாயில் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டது. குறித்த பகுதியில் பொலிசாரும் வரவழைக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பான மகஜரை கையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை குறித்த இடத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் குறித்த பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.

போராட்டத்தின் போது எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும். எமது மண்ணை ஆக்கிரமிப்பதை நிறுத்து. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பை நிறுத்து, அரசே எமது பூர்வீக நிலத்தை எமக்குத் தா. இலங்கை அரசே எமது மண்ணில் மகாவலியை நிறுத்து. உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும், வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும். எமது கடல் வளம் நமக்கு வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறும் சுமார் 300 மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

mahawali3 மகாவலி அபிவிருத்தி நில ஆக்கிரமிப்பை எதிர்த்து முல்லைத்தீவில் பேரணிதமிழர் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இந்த மகாவலி அபிவிருத்தி என்னும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது 1977ஆம் ஆண்டு காமினி திஸநாயக்க மகாவலி அமைச்சராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் 30 வருட காலத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. ஆனால் காமினி திஸநாயக்கவோ 6 ஆண்டுகளிலேயே இதனை முடித்திருந்தார்.

அவரின் பின்னர் வந்த எந்த அரசாங்கம் என்றாலும் இந்த மகாவலி அபிவிருத்தி என்ற பிரகடனத்தை மறக்கவில்லை.

அன்று முதல் இன்று வரை இந்த திட்டத்தின் மூலம் தமிழர் தாயகப் பகுதிகள் அபகரிக்கப்படுகின்றன. முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலேயே இந்த ஆக்கிரமிப்பு  அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த எல்லையோரக் கிராமங்களின் எல்லைப் பகுதியில் சிங்கள மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தையும் முழுமையாக சிங்களவர்களின் பிரதேசமாக மாற்றும் முயற்சியிலேயே சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இதை தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள் தட்டிக்கேட்டு தீர்வு எடுக்கா விட்டால், இன்னும் சில ஆண்டுகளில் முல்லைத்தீவு சிங்கள மாவட்டமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

புளுட்டோ ஒரு கிரகமே –நாசா விஞ்ஞானி

புளுட்டோ என்பது ஒரு கிரகம் தான் என்று நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒக்லஹோமாவில் நடைபெற்ற முதல் ரோபோட்டிக் நிகழ்வில் அவர் பேசிய போது இதைக் குறிப்பிட்டார்.

”எனது கருத்தின்படி பு@ட்டோ என்பது ஒரு கோள்.   நான் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். ஏனெனில், எனது ஆய்விற்குட்பட்டு நான் கண்டறிந்த விடயம் இது” என்று கூறினார்.

கடந்த 1930ஆம் ஆண்டு புளுட்டோ கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிந்தவர் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர் கிளைட் டோம்பக். அந்த நேரத்தில், சூரியக் குடும்பத்தில் 9ஆவது கிரகமாக புளுட்டோ கருதப்பட்டது.

சூரியக் குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் குய்ப்பர் வளையத்தில் புளுட்டோ அமைந்திருந்தது. ஆனால், அதே போன்று தோற்றமுடைய வேறு அம்சங்களும் அப்பகுதியில் கண்டறியப்பட்டதால், புளுட்டோ ஒரு கோள் அல்ல என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போது நாசா தலைவர் அது ஒரு கோள் தான் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை சந்தித்த கனேடிய தூதுவர்

இலங்கை்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்மிலன் மற்றும் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஒலேற் ஆகியோருடன் ஒட்டவாவிலிருந்து வருகை தந்துள்ள சமாதானத்திற்கான நீண்டகால செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (27.08) வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது போருக்குப் பின்னர் வன்னிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீள் குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னரான நிலைமைகள் கனடா மற்றும் புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் மேம்பாடு தொடர்பாகவும் குறிப்பாக கனடா நாட்டினால் மேற்கொள்ளப்படக்கூடிய அனுசரணை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அண்மையில் நெதர்லாந்து நாட்டு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும், மாங்குளத்தில் அமைக்கப்படும் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் உளநல பிரிவுகளில் பணிக்கமர்த்தப்பட இருக்கின்ற ஊழியர்களிற்கான விசேட பயிற்சிகளில் கனடா நாட்டினால் நல்கக்கூடிய அனுசரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பின் உதவி செய்ய இன்டபோல் தயாராக உள்ளது

சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் உள்ளதென அவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு நாம் உதவி செய்யத் தயாராக இருக்கின்றோம். உதவி கோரினால் எம்மால் முடியுமான அளவு அச்சுறுத்தலை முறியடிக்க உதவி செய்வோம் என சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்திருக்கின்றார்.

21/4 தொடர் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இன்டர்போலின் உடன் நடவடிக்கைக் குழு இலங்கையில் தங்கியிருந்து, குறித்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை உட்பட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆராய சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை நேற்று (27.08)மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இங்கு வந்த அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் மட்ட தலைவர்களை சந்தித்த பின்னர் மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

எங்கள் காணிகளை விட்டு வெளியேறுங்கள் மட்டுநகரில் ஆர்ப்பாட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் வசிக்கும் மக்கள் கலந்துகொண்டு, தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக அபிவிருத்தி எனும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவான காணிகள் அபகரிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

‘வனஜீவராசிகள் திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே’, ‘அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே’, ‘இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களில் அரசபடையினர், அரசியல்வாதிகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் வழங்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.