Home Blog Page 2783

பயங்கரவாதத் தாக்குதல் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றது?எதற்காக நடைபெற்றது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இனி நடைபெறாது எவ்வாறு தடுப்பது? என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும், எதிர்க்கடசியும் செயற்படுகின்றது. இது மிகவும் கேவலமான செயற்பாடு இதனால் நாட்டில் தேசிய பாதுகாப்பு மேலும் கேள்விக் குறியாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டில் அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படடன.இந்த சம்பவத்தினை முழுமையாக ஆராயாது அரசும் எதிர்க்கட்சியில் உள்ள மகிந்த தரப்பும் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அண்மைய நாட்களாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த குற்றச் சாட்டு சுமத்தப்படுகின்றதா?அல்லது உண்மையிலேயே அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க வேண்டும்.

நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் றிசாத் பதியுதீன மீது குற்றம் சாட்டுவதற்கு ஓர் முக்கிய காரணிகளும் இருக்கலாம். இந்த அரசினை இலகுவாக வீழ்த்த வேண்டுமானால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் அவருக்கு சார்பான பாராளுமனற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவினை பின் வாங்குவார்கள் இதனால் அரசுக்கு பெரும்பான்மை இல்லாது போகும் அப்படியானால் அரசு கவிழும் இதற்காகவே எதிர்க்கடசியினர் பாடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அரசும் மகிந்த தரப்பும் அரசியல் நோக்கத்துடனேயே செயற்படுகின்றனரே தவிர உண்மயான குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நோக்கமில்லை. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இந்த சம்பவத்தினை வைத்து அரசியல் இலாபம் தேடாது நாட்டு மக்கள் நலனில் அக்கறை எடுத்து செயற்பட வேண்டும். நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் காரணமாக ஏராளமான அப்பாவி மக்களின் உயிரிகள் காவு கொள்ளப்பட்டுள்ளன.எனவே இதனை உணர்ந்து அனைத்து தரப்பும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

பேனா முனையில் ஊடகப் பணியாற்றிய ஊடகவியலாளர்களை படுகொலை செய்த சிங்கள பேரினவாதம் – சட்டத்தரணி கே.சுகாஸ்

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை திறந்த வெளி மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடவியலாளர்களின் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதான சுடரேற்றி உரையாற்றிய சட்டத்தரணி கே.சுகாஸ்,

ஊடகவியலாளரும் தேசியத் தலைவரால் நாட்டுப்பற்றாளர் என கெளரவிக்கப்பட்ட ஐயாத்துரை நடேசன் பேனா முனையில் ஊடகப் பணியாற்றியபோது சிங்களபேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டார். இன்று படுகொலை செய்யப்பட்டு 15 ஆம் ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதற்கான நியாயம் இன்னும் கிடைக்கவில்லை.

இது இவர் விடயத்தில் மட்டுமல்ல. நிமலராஜன், தராக்கி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் படுகொலை விடயங்களிலும் நீதியான விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படாது மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதற்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருமளவிலான ஊடவியலாளர்களம் கலந்து கொண்டு, ஊடக பணியின் நிமித்தம் உயிர் நீத்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஈகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சராக சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை புதுடில்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் இந்திய வௌவிவகார சேவையின் முன்னாள் மூத்த அதிகாரியான, சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், இந்திய மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவர் இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தின்  அவைகளில் உறுப்பினராக இருக்காத போதும் இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

இவர் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

இவர் தமிழ்நாடு, திருச்சியைச் சேர்ந்த மூத்த சிவில் சேவை அதிகாரியும், அனைத்துலக விவகாரங்களில் வல்லுநராக இருந்தவரும், ஊடகவியலாளருமான கே.சுப்பிரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு இலங்கைக்கு அமைதிப்படையை கொண்டு வருவதில் இவரின் பங்கு முக்கியத்துவமாக அமைந்திருந்தது.  கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளராகவும், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

2015ஆம் ஆண்டு தொடக்கம், இந்திய வெளிவிவகார செயலராக இருந்த போது, அமெரிக்கா, சீனா தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.

2018ஆம் ஆண்டு அவர் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் பங்குபற்றியிருந்தார்.

 

நோர்வே தூதுவரின் தென்மாகாண விஜயம்

சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜேன் கொஸ்ரட்செதர்  சிறிலங்காவின் தென் மாகணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் மற்றும் தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது விஜயத்தின் போது பிரதேச பௌத்த, கத்தோலிக்க இஸ்லாமிய மதத் தலைவர்களையும், பெண் தலைமைத்துவ குடும்பத் தலைவிகளையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.  மேலும் துறைமுக நிறைவேற்று அதிகாரியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐ.நா.பிரதிநிதிகள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப், மற்றும் சிறிலங்காவிற்கான பணிப்பாளர் டிம் சட்டன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று (31) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கéர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்டுத்து செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு ஆளுநர் எதிர்ப்பு

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றும் த.சத்தியமூர்த்தியின் பதவிகள் தொடர்பாக வடக்கு ஆளுநர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பதவிகளையும் இவர் வகிப்பதற்கு அநேக அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மத்திய அரசு, மாகாண நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என விமர்சித்திருந்தனர்.

வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினார். தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ஆளுநருடன் பேச்சு நடத்தியிருந்தார்.

சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியை மட்டும் கவனிக்குமாறு ஆளுநர் சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை தேவனேசன் கவனிப்பார் என்றும் ஆளுநரால் சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் எழுத்துமூலமாக இந்த அறிவித்தலை தந்தால் மட்டுமே தான் ஏற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் தான் தெரிவித்ததாக சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ”தேசத்தின் வேர்கள்” அமைப்பினர்

2019 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள், ”தேசத்தின் வேர்கள்” என்ற அமைப்பின் நிறுவுனர் கணேசன் பிரபாகரன் தலைமையில் இன்று (31)  மேற்கொள்ளப்பட்டது.

சிரமதானப் பணிகளை முடித்த பின்னர் கருத்துத் தெரிவித்த கணேசன் பிரபாகரன் தெரிவிக்கையில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படும் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

எனது மகனின் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நீதியை எதிர்பார்க்கிறேன் – ரஜிகரின் தந்தை

எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை

தெரிவித்துள்ளார்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார் அவர் மிகவும் அமைதியானவர்.அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவர விரும்பினார்.ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது.

திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள்அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது.

நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தன.நான் பிரதே அறையின் உடலை திறந்தேன் .முதலில் இருந்தது எனது மகனின் உடல்.

இலங்கையில் உரிய நீதி கிடைக்காது.நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன் , நான் ஒருபோதும் இலங்கையை சேர்ந்த நீதிபதிகளை நம்புவதில்லை.

நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன். நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா சனாதிபதி தேர்தல் டிசம்பர் 7 இல் – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,

டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்களுள்ளன. இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், ஆளுங்கட்சியாக இருக்கலாம் எதிர்க்கட்சியாக இருக்கலாம் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை. அதனால் எனக்கும் அவசரமில்லை. ஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை நானும் எனது தீர்மானம் குறித்து காத்திருப்பேன்.

தனியார் ஊடகங்களை புறக்கணிக்கும் வடக்கு ஆளுநர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுிற்கான விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியமைக்கு வடக்கு ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிசேனவின் முல்லை. விஜயம் தொடர்பாகவும், 03 ஆம் திகதி அன்று தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெறும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம்” தொடர்பாகவும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் உட்பட முப்படையினர், கொவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா பேசும் போது, முல்லைத்தீவிற்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி, வெறுமனே இந்தத் திட்டங்களை மட்டுமன்றி, நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன் போது வடமாகாண ஆளுநர் குறுக்கிட்டு, மன்னிக்க வேண்டும் நடைபெறவள்ள நிகழ்விற்கு உங்களின் பங்களிப்பு என்ன என்பது மட்டுமே எங்களுக்குத் தேவை. இந்த விடயங்கள் தொடர்பாக பேசுவதற்கு வேறு இடங்கள் உள்ளது என்று கூறினார்.  இதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் ஆளுநரின் ஊடகச் செயலாளர், ஊடகவியலாளர்களின் கமராக்களை மறைத்து,  ஒளிப்பதிவு செய்வதை தடை செய்தார்.

இவ்வேளையில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தனியார் ஊடகங்கள் அனைத்தையும் வெளியே செல்லுமாறு பணித்துள்ளார். ஆனால் அரச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபடுத்தியிருந்தனர். அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாந்தி சிறிஸ்கந்தராசா, ஜனாதிபதி பிரச்சினைகளை புரிந்து செயற்பட வேண்டும். விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

சில ஊடகங்கள் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுவதாலேயே தனியார் ஊடகங்களை வெளியேற்றியிருக்கலாம் என்று  கூறினார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முல்லைத்தீவிற்கு செல்கின்ற நிகழ்வுகளுக்கு தனியார் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமை என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வொன்றாக அமைகின்றது.