Home Blog Page 2718

போரை முடித்து வைத்த எனது ஆயுதங்கள்

நாம் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்திருந்த யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போரை முடித்து வைத்தது. அதற்கான அனைத்து ஆயுதங்களும் தன்னுடைய அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித் துள்ளார்.

களனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறினார்.“நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த நிலையிலேயே தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்து ள்ளது. 2005 ஆம் ஆண்டு நான் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டின் பொருளாதார நிலை சிறந்த மட்டத்தை அடைந்தி ருந்தது. தற்போதைய அரசாங்கமும் தவறுகளைச் செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

 

இந்த வருட முடிவுக்குள் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – ஐ.நா

தற்போது அமைதியாக உள்ள தீவிரவாதிகள் இந்த வருட முடிவுக்குள் மீண்டும் பாரிய தாக்குதலை உலகில் உள்ள நாடுகளில் நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச்சபை மேலும் தெரியவருவதாவது:

உலக அமைதிக்கு முஸ்லீம் தீவிரவாதம் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் போரிட்டுவந்த 30,000 இற்கு மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போதும் இயங்குநிலையில் உள்ளனர்.

அவர்களில் பலர் அல்கைடாவில் இணைந்துள்ளனர், சிலர் வேறு அமைப்புக்களில் இணைந்துள்ளதுடன், சிலர் தலைவர்களாகவும் உருவாகலாம்.

இந்த அறிக்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2016 களில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளது. சரணடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வு அதிக பயனைத் தரவில்லை. அவர்கள் மீண்டும் தீவிரவாதத்தை நாடுகின்றனர். அதற்கு வறுமை, நம்பிக்கையின்மை, வேலைவாய்ப்பின்மை, புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற உணர்வு என்பனவும் சில காரணங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து 6,000 இற்கு மேற்பட்டவர்கள் ஐ.எஸ் இல் இணைந்திருந்தனர். அவர்களிள் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மிகுதியானவர்கள் தப்பியுள்ளனர்.; 2,000 பேர் ஐரோப்பாவுக்கு திரும்பியுள்ளனர், ஏனையோர் உலகின் பலபகுதிகளுக்குச் செல்லலாம்.

ஐ.எஸ் வசம் தற்போதும் 50 மில்லியன் தொடக்கம் 300 மில்லியன் டொலர்கள் வரையிலான பணம் உள்ளது என அதில் மேலும் தொவிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டுஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்!

தியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும், தமிழன அழிப்பிற்கு நீதிகோரியும், “ பிரான்சு பாரிசிலிருந்து – ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் வலிகளை கால்களிலும், நெஞ்சிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்கும் நடைபயணம்.

28.08.2019 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமாகி

16.09.2019 திங்கள் ஜெனீவா ( முருகதாசு திடல் ) நீதிக்கான பேரணியன்று நிறைவடையும்.

அன்பான எமது புலம்பெயர் தேசமக்களே! பிரான்சு வாழ் மக்களே !

கண்ணீரிலும், செந்நீரிலும் இன்று குளித்துக் கொண்டிருக்கும் எம் தமிழீழ மண் சிங்களத்தால் அங்குலம் அங்குலமாக கபளீகரம் செய்யப்படுகின்றது. தாயகத்தில் குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மௌனித்து வாய்கள் கட்டப்பட்ட நிலையில் புலத்தில் எம் உயிலும் மேலான மொழியையும், கலை பண்பாடுகளையும் பாதுகாக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் அந்த மொழியும் பண்பாடும் வாழ, பறிபோய்க்கொண்டிருக்கும் எமது மண்ணையும் பாதுகாக்க வேண்டுமல்லவா ?

இன்று களத்திலும், புலத்திலும் தாயகம் நோக்கி நடைபெறும் அனைத்து சனநாயகவழிப் போராட்டங்களும் ஏதோவொரு வகையில் பறிபோகும் எமது மண்ணை நிறுத்தி வைக்கும்.

புலத்தில் எம்மக்களினால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான சனநாயக போராட்டம் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் எமது மண்ணையும், போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வைக்கும் என்பதை நம்புவோம்.

இவ்வாறு பல்வேறு எமது நியாமான கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐ.நா.வின் மனிதவுரிமைகளின் 42 ஆவது கூட்டத்தொடரின் போது நடைபெறவிருக்கும் இவ் நடைபயணப்போராட்டத்தில் இளையவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

“எனது தாயகம் அணலிடை வாழ நாம் மட்டும் நலம் காண்பதேது ! உணவு உறக்கங்கள் ஏது!

உடல்கள் சாயலாம் ! சாயலாம் ! உயிர்கள் சாயலாம் ! சாயலாம் ! உலகில் அறம் சாயுமா ? கடல்கள், புயல்கள், ஓயலாம், ஓயலாம் தமிழர் படை நாம் எமது நடைபயணம் ஓயுமா ? ஓயாது !

நடைபயணத்தில் தம்மை இணைத்து பங்களிக்க விரும்புவோர்.

0033 75 80 87 084 – 01 43 15 04 21 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு அலுவலகத்துடன்

பி பகல் 14 மணிமுதல் 20.00 மணிவரை தொடர்பு கொண்டு உங்கள் விபரத்தைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் – மெலனி திசநாயக்கா

விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார். . சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார்.

தான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது வழமை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏன் விடுதலைப்புலிகள் அவர்களது இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ? ஏன் தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தார்கள்?

நேர்த்தியான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணியவர்கள் விடுதலைப்புலிகள். இது போன்ற நல்ல கட்டுக்கோப்பான இராணுவத்தினையோ அல்லது அமைப்பினையோ பற்றி நான் ஒருபோதும் பார்த்தோ அல்லது கேட்டோ அறிந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சனை விவகாரத்துக்கு ஒரு போரில்லாத முடிவைப் பெறுவதற்கு உண்மையான நம்பிக்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் நுழைந்தபோது , இலங்கையரசாங்கம் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுக்களை விடுதலைப்புலிகளுக்கு வைக்கப்படும் ஒரு பொறியாக வடிவமைத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளது பலத்தையும் விடுதலைப்புலி வீரர்களது மனோபலத்தையும் சிதைப்பதற்கு மிகவும் வஞ்சகத்தனமும் தந்திரமும் கொண்ட பொறியாக அது வடிவமைக்கப்பட்டதாகவும்,ஆரம்பத்தில் சமாதானம் சீராகச் சென்றுகொண்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் கோழைத்தனமான யுத்தநிறுத்த மீறல்களால் படிப்படியாக சமாதானம் சீர்குலையத்தொடங்கியதால் , ஆச்சீர்குலைவுகளே மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியதாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள் என்றும், விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள் எனவும், அவர்கள் எல்லா வழிகளிலும் சிங்களமக்களுக்கு சமமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் எந்தவொரு உண்மையான பௌத்தனோ அல்லது , நல்ல சிங்களக்குடிமகனோ இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் முரளி படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத் திலிருந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முரளிதரன் இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார் 1992 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 133 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் பெண்ணோடு விக்கெட்டுகளை வீழ்த்திய முரளி சாதனை படைத்திருந்தார் இதனை கொண்டாடும் விதமாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் இன்னொரு என்ற பெயரில் திரைப்படமாக படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் இலங்கை அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்றும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்றும் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் ஈழத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தின் சில அமைப்புகளும் குரல் எழுப்பினர்

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு நெருக்கமான சிலர், இலங்கை தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் திரைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது, அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாவது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லதல்ல என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை குறித்த திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் நீதி கிட்டவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, 13 ஆண்டுகள் ஆகியும் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் நான்காம் நாள் சிறீலங்கா படையினரே 17 பணியாளர்களையும் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் பகுதியில் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

திட்டமிட்ட முறையில் படுகொலைகளை மேற்கொண்டவர்களை 13 ஆண்டுகள் ஆகியும் சிறீலங்கா காவல்துறையினரால் அணுகக்கூட முடியவில்லை என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது இந்த படுகொலை மட்டுமல்லாது ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துவதற்கு அனைத்துலக நீதி உதவிகள் தேவை என்பதை உணர்த்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் உட்பட 16 தமிழர்களும் ஒரு முஸ்லீம் இனத்தவரும் அடங்கியிருந்தனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணிகளை இந்த அரச சார்பற்ற நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மனத்தை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி திறக்கப்படும் ; ஒருபோதும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படாது – ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளார்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த 100 இற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புகள் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், மட்டக்களப்பில் கட்டப்பட்டு வரும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கான நிதி எங்கிருந்து வருகின்றது என்பது குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்காரணமாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு இவ்விடயம் குறித்து ஆராய்ந்ததுடன், குறித்த பல்கலைக்கழகத்தினை அரசுடமையாக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, குறித்த பல்கலைக்கழகத்தினை கட்டுவதற்கான நிதி சரியான முறையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றதாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதில் மூன்று பௌத்த பீடங்கள் இணைந்து தீர்மானம்

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளிலிருந்து வேட்பாளராக களமிறக்கப் போகின்றவர் கொண்டிருக்க வேண்டிய  பொது நியதிகளை முன்வைப்பதற்கு மூன்று பௌத்த பீடங்களினதும் மகா சங்கத்தினர் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

இந்த நியதிகளில், ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை நிருவகிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைமை தொடர்பிலும் கொள்கை ரீதியிலான விடங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அஸ்கிரிய பீட பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி பி.எம்.ஐ.சி.எச். இல் இந்த விடயங்களை அறிவிக்கும் விசேட நிகழ்வொன்று மகா சங்கத்தினர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்கள் பெளத்த சமயத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் – யாழ்.நாக விகாரை விகாராதி

இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையினை பெளத்த சமயத்தின் மீதும் வைக்கவேண்டும். அதுவே இரு சமயங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம்.

இந்து சமயம் சார்ந்த மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அநாகரிகமான செயற்பாடுகளும் அடாத்தான செயற்பாடுகளும் பெளத்த மதத்தின் நிலைப்பாடாகது.

அவர்கள் பிக்குகளா? என்ற சந்தேகமும் எமக்கு எழுவதுண்டு. யாழ்.மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமய மக்களுக்கு அசம்பாவிதங்கள் உண்டாகாது.

மேற்கண்டவாறு யாழ்.நாக விகாரை விகாராதி பதிஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார். இந்து சமய மக்களுக்கிடையிலும், பெளத்த சமய மக்களுக்குமிடையில் உருவாகியிருக்கும்

முரண்பாடுகள் குறித்து யாழ்.ஊடக அமைந்ததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், பெளத்த மதத்திற்கு இந்து மதத்திற்கும் தலமை இல்லை. தர்மம் தான் இரு மதங்களுக்குமே தலமை. மேலும் இந்த இரு சமயங்களுக்குமிடையில் பிரிவுகள் இல்லை.

இந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது. மேலும் பெளத்த சமயத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமய கடவுள்களே இருக்கின்றனர்.

எந்த விகாரைக்கு சென்றாலும் இந்து சமய கடவுள்களை பார்க்கலாம். இந்நிலையில் இந்த இரு சமயங்களுக்குமிடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது.

அதற்கு ஒரு சில பெளத்த பிக்குகளே காரணம். அந்த ஒரு சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் பெளத்த சமயத்தின் நிலைப்பாடாக அமையாது. அது பெளத்த சமயத்தின் நிலைப்பாடல்ல.

பெளத்த பீடங்களுக்குள் உள்ள பிரச்சினைகளி னால் சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் இந்து சமயத்திற்கு பங்கம் உண்டாக்குவதாக அமைந்துள்ளது.

இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பெளத்த பிக்குகள் தானா என சந்தேகம் எழுகிறது. நாக விகாரை வடக்கு தெற்கு மக்களுக்கிடையிலான உறவு பாலமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இந்து பெளத்த மக்களிடையில் நல்லிணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பை நாம் எடுப்போம். மேலும் யாழ்.மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமய பங்கம் விளைவிக்கப்படாது.

அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதனை எதிர்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன். இந்து சமயத்தை பெளத்தர்களும், பெளத்த சமயத்தை இந்துக்களும் பாதுகாக்க வேண்டும்.

அதேபோல் இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையினை பெளத்த சமயத்தின் மீதும் வைக்கவேண்டும். அதுவே இரு சமயங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்றார்.

சிறீலங்கா வான்படைக்கு இந்தியாவின் சுற்றுக்காவல் விமானம்

சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறீலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியா வழங்கும் படைத்துறை விமானத்தை ஆய்வு செய்வதற்காக சிறீலங்கா வான்படை அதிகாரிகள் இந்தியாவின் கொச்சின் வான்படைத்தளத்திற்கு சென்றுள்ளனர்.

ஜேர்மனின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 என்ற இந்த விமானத்தை அவர்கள் ஆய்வு செய்வதுடன், அதற்கான பயிற்சிகளையும் பெறவுள்ளனர்.

திருமலையில் சீனன்குடாவில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படையின் கடல் கண்காணிப்பு படைப்பிரிவுடன் இணைந்து வான்படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்த விமானம் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.