ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதில் மூன்று பௌத்த பீடங்கள் இணைந்து தீர்மானம்

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளிலிருந்து வேட்பாளராக களமிறக்கப் போகின்றவர் கொண்டிருக்க வேண்டிய  பொது நியதிகளை முன்வைப்பதற்கு மூன்று பௌத்த பீடங்களினதும் மகா சங்கத்தினர் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

இந்த நியதிகளில், ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை நிருவகிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைமை தொடர்பிலும் கொள்கை ரீதியிலான விடங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அஸ்கிரிய பீட பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி பி.எம்.ஐ.சி.எச். இல் இந்த விடயங்களை அறிவிக்கும் விசேட நிகழ்வொன்று மகா சங்கத்தினர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.