Home Blog Page 2707

நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதேயாகும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்போன்று நேற்று மாலை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கல்முனை என்பது 100 வருடங்களுக்கு முன்னரே இருந்து முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நகரம். தமிழ் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உப செயலகத்தை அவர்கள் நினைத்தால் போல தரமுயர்த்த அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.

பொய்யான பல தகவல்களை ஊடகங்களிடமும், மக்களிடமும் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகிறார்கள். அவர்களின் கருத்துக்களால் முஸ்லிம் புத்திஜீவிகளும் கூட சில நேரங்களில் குழம்பி போகிறார்கள். கல்முனையில் யாருக்கும் எந்தவித விட்டுக்கொடுப்புக்களோ அல்லது அநியாயங்களோ நாங்கள் செய்யப்போவதில்லை. இவர்களின் பொய்யான பரப்புக்களை நாங்கள் நம்ப தேவையும் இல்லை. கல்முனை விவகாரம் பற்றிய முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக என்னிடம் யார் எப்போது வினவினாலும் பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன்.

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இரக்கமும்,பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நான் என் மக்களின் உரிமைக்காக போராடும் சண்டைக்காரனாக இருந்து போராடி என்னால் முடிந்த சகல விடயங்களையும் சாதிக்க முயற்சி செய்து வருகிறேன்.

சில நேரங்களில் உரிமை விடயங்களில் எனது சத்தம் உயர்ந்து வந்தால் நான் மஹிந்த அணிக்கு தாவப் போவதாக வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பவன் நான். சரியா பிழையா என்பதை ஆராய முன்னர் எமது கட்சியின் தீர்மானத்தை மதிப்பவன் தயவு தாட்சணைகள் பார்த்து எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்

இந்த முறை தமிழர்கள் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் இலங்கை அரசாங்கத்துடனான அவர்களின் நடவடிக்கையும் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்று கூறும்.

தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தால், தமிழர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு பின்வரும் விடயங்களை சொல்லுகிறார்கள், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்:

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக்கிய ராஜ்யவை (ஒற்றை ஆட்சியை ) தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்
2. வடகிழக்கு பிரிவினையை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்
3. புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்.
4. 2015 இல் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லீம் சபையை நிறுவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்ப்பது மட்டுமன்றி, எதிர்காலத்திலும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்று கூறுகிறார்கள்.
5. தமிழர்கள் ரணிலினதும் சஜித் பிரேமதாசவினதும் வடகிழக்கில் 1000 விகாரைகளை உருவாக்ககும் திட்டத்தை நிராகரிக்கிறார்கள்
6. நாவற்குழி , வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்தை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்
7. இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை தமிழர்கள் விரும்புகிறார்கள்
8. சிங்களவர்களுடனான எந்தவொரு பேச்சையும் தமிழர்கள் நிராகரிக்கின்றனர்.
9. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சர்வதேச நாடுகளின் உதவிகளை மறுத்ததால், தமிழர்கள் இவர்களை மறுப்பதால், தமிழ் அரசியல் தேவைகளை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈடுபாடு தேவை என்பதை தமிழர்கள் மீண்டும் கூறுகிறார்கள்

வடகிழக்கு அரசியல்வாதிகளின் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை அகற்றுவதே தமிழர்களுக்கு மற்ற மற்றும் மிக முக்கியமான நன்மை.

தமிழர்களின் எந்த ஆதரவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியற்றது. அவர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளுடன் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தனர், அவை, கூட்டாட்சி தீர்வு, வடகிழக்கு இணைப்பு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, இராணுவத்தை நிலத்தை திரும்பப் பெறுதல், இலங்கை இராணுவத்தை வடகிழக்கில் இருந்து விடுவித்தல் மற்றும் பல.

எல்லாவற்றிற்கும் பதிலாக, அவர்களின் முக்கியமான விஷயங்கள் தமிழ் எம்.பி.க்களுக்கான அரசாங்க பதவிகள், எதிர்க்கட்சி தலைமை, இப்போது எதிர்க்கட்சித் தலைமை இல்லாமல், சம்பந்தன் கொழும்பில் ஒரு ஆடம்பர கார் மற்றும் பங்களாவைத் தொடர்ந்தார். தமிழர்களுக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது எஸ்.டி.எஃப் பாதுகாப்பு தேவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பதன் மூலம், தமிழர்கள் புதிய தலைமைக்கு வழி வகுப்பார்கள்.

சிறிய வித்தியாசங்களை புறக்கணிப்பதன் மூலம் ஒன்றுபட்ட புதிய தலைமை உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். யாராவது ஒற்றுமையை நிராகரித்தால், அவர்கள் ஒரு தேர்தல் சுழற்சிக்காக தமிழ் அரசியலை விட்டு வெளியேற வேண்டும்.

கடவுள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – 1976 இல் தந்தாய் செல்வா

நன்றி,

புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

தமிழினத்தை உலுக்கிய செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை பல்வேறுதாக்குதல்களை மேற்கொண்டு தமிழர்கள் என்ற ஒரே காரணதிற்காக வயது வேறுபாடு இன்றி கொத்து கொத்தாக எமது மக்களை படுகொலை செய்தது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான தாக்குதல் ,நவாலிசென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின்    மீதான தாக்குதல், வள்ளிபுனம் செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆகியன எம் மக்களின்மனங்களில் என்றுமே  ஆறாத வலியையும் வடுக்களையும்  ஏற்படுத்தி விட்டன.

சிங்கள பேரின வாதத்தின் கோரப்பசிக்கு “கீபீர்” போர் விமானங்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்14, ஆம் நாள்  செஞ்சோலையில் மாணவிகளை பலி எடுத்துக் கொண்டது.தலைமைத்துவ பயிற்சிக்காக மாணவிகள் ஒன்று கூடியிருந்தனர் .கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு,”Women’s Rehabilitation and Development (CWRD)” நிதி உதவியுடன் இப்பயிற்சி நெறி ஒழுங்கு படுத்தப்பட்ருந்தது.

சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டு துல்லியமாக
மாணவிகள் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்செய்தி சர்வதேச  முக்கிய ஊடகங்களில் வெளியாகிய போதிலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்நிதியம் மௌனமாகவே இருந்தது என்பதே வேதனையான விடயம்சிறிலங்கா அரசாங்கத்தின்  மிலேச்சத்தனமான இந்த  இனப்படுகொலையை உலகம் உற்று
நோக்காதது எமக்கான சபக்கேடு.

13 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை 14 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள  நிலையில்வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை
விதித்துள்ள புதுக்குடியிருப்பு  சிறிலங்கா காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரைநேற்றைய தினம்  புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர்.

உரிய அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு குறித்த வீதியில் நினைவு தூபி அமைக்கப்பட்ட போதும் நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு சிறிலங்கா
காவல் துறையினர் தடை விதித்திருக்கிறார்கள்.

இறுதிப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னரும்  கூட குண்டுத் தாக்குதலில்கொல்லப்பட்ட மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே!தாயகத்திலும் புலத்திலும்
உள்ள மாணவர்களே இது பற்றி சிந்தியுங்கள்! செய்ற்படுங்கள்!மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதனை  உறுதி  எடுத்துக் கொள்ளுங்கள்.!

எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை(செவ்வி) – அமலநாயகி

உயிரை துச்சமென மதித்தே உறவுகளை தேடி வருகின்றோம். எம்மீதான தாக்குதலால் எமது உறவுகளுக்கான போராட்டத்தை தடுத்துவிட முடியாது. ஐ.நா.மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தன்று திட்டமிட்டபடி கிழக்கில் போராட்டம் நடைபெறும். என்னால் எழுந்து நடக்க முடியாது விட்டாலும் நொண்டி நொண்டியாவது நானும் அதில் பங்கேற்பது உறுதி என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி தெரிவித்தார்.

கடந்த ஆறாம் திகதி மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணத்துக் கொண்டிருந்தபோது திட்டமிட்ட முறையில் விபத்துக்குள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு…

கேள்வி:- உன்னிச்சைப் பகுதியில் நீங்கள் பயணத்துக்கொண்டிருந்தபோது திட்டமிட்டே விபத்து சம்பவிக்கப்பட்டதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- நான் மரண வீடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உந்துருளியில் எனது மகளுடன் மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் எதிர்த்திசையில் உந்துருளியில் மூன்று பேர் வந்தார்கள்.  அவ்வாறு வந்தவர்கள் எம்மை நோக்கி தமது உந்துருளியை வேகமாக செலுத்தினார்கள். திடீரென விரைந்து நாம் பயணித்த வீதியின் மறுபுறத்துக்கு வந்தவர்கள்  எனது உந்துருளி மீது மோதினார்கள். நானும் எனது மகளும் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டோம். நாம் கூச்சலிட்டோம். பின்னர் அவர்கள் எம்மை அச்சுறுத்தும் நோக்கத்துடன் பார்த்துவிட்டு அங்கிருந்து விரைவாக மறைந்து விட்டார்கள்.

கேள்வி:- உந்துருளில் வந்தர்வகள் யார் என்பதை அறிவீர்களா?

பதில்:- எனக்கு மூவரையும் தெரியாது. ஆனால் உந்துருளியில் வந்தவர்களில் ஒருவர் புளட் அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தரான மோகன் என்பவரின் மைத்துனராவார். ஏனைய இருவர் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் தெரியாது. ஆனால் எம்மை மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்த சமயத்தில் ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். பிடிபட்ட நபர் மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கேள்வி:- காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா?

பதில்:- இந்த விபத்துச் சம்பவம் சம்பந்தமாக என்னிடத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் வந்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர் யார் என்று கேட்டபோது காவல்துறையினர் அவர்கள் தொடர்பில் பூரணமான தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடி நீதவானின் முன்னால் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஏனையவர்களை தேடிவருவதாக கூறினார்கள். ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு என்னை அழைக்கின்றபோது மன்றில் ஆஜரா குமாறு கூறிச்சென்றனர். எனது  உந்துருளி காவல் நிலையத்திலேயே உள்ளது.

கேள்வி:- உங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்காக இச்சம்பவம் இடம்பெற்றதென்று கருதுகின்றீர்களா?

பதில்:- என்னால் முழுமையாக அவ்வாறு கூறமுடியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்த எமது  உறவுகளை ஒன்றிணைத்து திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்பதற்கான போராட்டங்களை ஆரம்பித்தபோது சிறீலங்கா புலனாய்வாளர்கள் என்னை படம்பிடித்தார்கள். காணொளி எடுத்தார்கள். நான் செல்லுமிடமெல்லாம் என்னை பின்தொடர்ந்தார்கள். எனது அயலவர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்கள். எனது உறவினர்களிடத்தில் என்னை இந்த விவகாரத்திலிருந்து விலகியிருப்பதற்கு அறிவுறுத்துமாறு கோரினார்கள்.

இவற்றையெல்லாம் விடவும் எனக்கு நன்மை அளிப்பவர்கள் போன்று வார்த்தை ஜாலம் காட்டி என்னை ஒதுங்கியிருக்குமாறு கூறினார்கள். மாதாந்தம் எனது செயற்பாடுகள் பற்றி அறிக்கையை உயர்மட்ட புலனாய்வு கோரியிருப்பதாக கூறினார்கள். எனக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து நிதி அனுப்பப்படுவதாக கூறினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சி எமது நியாயமான கோரிக்கையை கைவிடவில்லை. ஒதுங்கி நிற்கவில்லை. எத்தனை அச்சு றுத்தல்கள் ஏற்படுத்தப்படடாலும் நீதிக்கான எமது போராட்டம் எமது உயிருள்ளவரையில் தொடரும்.

கேள்வி:- தற்போது உங்களது நிலைம எவ்வாறு உள்ளது? உங்களுடைய அடுத்தகட்டச் செயற்பாடுகள் என்னவாகவுள்ளன?

பதில்;:- நான் காலில் காயத்துடன் வீட்டில் முடங்கியுள்ளேன். என்னை வீட்டில் முடக்குவதே அவர்களின் திட்டமாக இருக்கின்றதோ என்று ஐயம் கொள் கின்றேன். இந்த திட்டமிட்ட விபத்துச் சம்பவத்திற்காகவாவது நீதி கிடைக்கின்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு கிழக்கில் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமி ட்டுள்ளோம். அந்த போராட்டத்தைத் திட்டமிட்டபடி முன்னெடுப்போம். எனது கால் காயம் முன்னேற்றமடையாது விட்டாலும் நொண்டிநொண்டியாவது அந்தப்போராட்டத்தில் பங்கேற்பேன். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் – நவீன் திஸாநாயக்க

13ஆவது திருத்தத்திற்கு அமைவாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று அமைச்சரும், காலம்சென்ற காமினி திஸாநாயக்கவின் புதல்வருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், சிங்கள மக்களிடம் இதுதொடர்பாக தெளிவூட்டி, இலகுவாக இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “80களில் இருந்த நிலைமை தற்போது இல்லை. நாம் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள்.

எமக்கு தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைத் தொடர்பாகவும் நன்றாக தெரியும். எனவே, தமிழர்களின் காணிகளை அரசாங்கத்துக்கு சொந்தமாக மாற்றவோ, அதனை அபகரித்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ நாம் எந்தக் காரணம் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

தமிழர்களுக்கு தேவையான அரசியல் உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது தற்போதைய நிலைமையில் அவசியமாக இருக்கிறது.

அத்தோடு, 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட யோசனையாக இருக்கிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே கருதுகிறேன். இதுதொடர்பாக சிங்கள மக்களுக்கு தெளிவூட்டி, சர்வஜன வாக்கெடுப்புடன் ஒரு தீர்வினை முன்வைக்க முடியும். இதுதொடர்பான நம்பிக்கையும் எமக்குள்ளது” என மேலும் தெரிவித்தார்.

அங்கு கோத்தா என்றால் இங்கு நான் என்பதே சரியானது – பொன்சேகா

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவையின் அடிப்படையில் பொருத்தமானது என  பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் எனவும், தன்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால், ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சரத்பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அரசின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைக்கவேண்டும் – அசாத் அலி

மஹிந்த அரசாங்கத்தின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைப்பதற்கு மைத்திரிபால, – ரணில் அரசாங்கத்துக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதாகவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு ,எஞ்சியிருக்கும் நாட்களிலாவது நிறைவேற்ற வேண்டுமெனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாது கோட்டாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. மொட்டு கட்சியினர் மஹிந்தவை நிறுத்தினாலும் மண் கௌவியே தீருவர். பெரும்பான்மையின வாக்குகள் மூன்று பெரும்பான்மையின கட்சிகளுக்கு பிரிந்து செல்லும். எனவே மொட்டு கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறலாமென கனவு காண்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் கள்வர்களும் ஊழல் வாதிகளும் இணைந்து தோற்றுவித்த இந்த மொட்டு கட்சியில் ஜனநாயகத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது? கடந்த ஆட்சியில் சட்டத்தை மதிக்காது, நீதிக்கு தலைவணங்காது செயல்பட்ட கோட்டா , விமல் வீரவன்ச போன்றவர்களின் நடவடிக்கைகளை மக்கள் மீண்டும் நினைத்து பார்க்கின்றனர்.

சிறீலங்காவில் மத சுதந்திரம் – ஆய்வு செய்ய வருகிறார் ஐ.நா அதிகாரி

சுதந்திரமான மதச் செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அகமட் சகீட் நாளை (15) சிறீலங்கா வரவுள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நாளை சிறீலங்கா வரும் அதிகாரி 15 ஆம் நாள் தொடக்கம் 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவில் தங்கியிருப்பார். சிறீலங்கா அரசு எவ்வாறு மதங்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றது, அவற்றை எவ்வாறு ஊக்கிவிக்கின்றது என்பது தொடர்பில் இவர் ஆய்வுகளை மேற்கொள்வார்.

வேறுபட்ட மதங்களிடையேயான உறவையும், சுதந்திரத்தையும் சிறீலங்கா அரசு எவ்வாறு மதிக்கின்றது மற்றும் வேற்று மத இனமக்களை சிறீலங்கா அரசு எவ்வாறு பாதுகாக்கின்றது என்பது தொடர்பில் தான் ஆய்வு செய்யவு;ளதாக சகீட் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட மதங்களின் சுதந்திரமான செயற்பாடு தொடர்பான அதிகாரி அஸ்மா ஜகன்கீர் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் அவரின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு எவ்வாறு நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பிலும் சகீட் ஆராயவுள்ளார்.

தனது 12 நாள் பயணத்தின் போது அவர் அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அவரின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதனிடையே, 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறீலங்கா அரசின் ஆதரவுடன் சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட பௌத்த மயமாக்கல்கள், சைவ ஆலயங்கள் மீதான அத்துமீறல்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை ஆதாரங்களுடன் தயாரித்து ஐ.நா அதிகாரியிடம் தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியா வென்னீரூற்று விவகாரம், நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம், தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள் தொடர்பான விவகாரம் மற்றும் சைவ ஆலயங்களிற்கு அண்மையாக சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள், இந்து ஆலயங்கள் மீதான சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான விரிவான அறிக்கை அவரிடம் வழங்கப்படவேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை தாயகத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவதானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் எல்லையில் சீன படை நடவடிக்கை

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும், சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டன.

ஹொங்கொங்கில் பத்து வாரங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இராணுவப் பயிற்சிக்காக கவச வாகன அணிவகுப்பு ஷென்ஸென் நகரை நோக்கிச் செல்வதாக, பீப்பல்ஸ் டெய்லி நாளேடு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது.

ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், சீனாவை சினமூட்டியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்செயல்கள் சிலவற்றைப் சீனா ‘பயங்கரவாதம்’ என்று கூறிச் சாடியது.

இம்மாதம் 6ஆம் திகதியன்று, சீன பாதுகாப்பு பிரிவின் 12 ஆயிரம் பேர் ஷென்ஸென் நகரில் கலகத் தடுப்புப் பயிற்சியில் பங்கேற்றனர். சமூக நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் காவல்துறையினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக ஷென்ஸென் நகரக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.

கடந்த திங்களன்று விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன. விமானச் சேவைகள் நேற்று வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஹொங்கொங்கில் பொலிஸாரைத் தாக்க ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை சீனா கடுமையாகச் சாடியுள்ளது. ஹொங்கொங்கில் பயங்கரவாதம் உருவாவதற்கான முதல் அறிகுறி இது என்று சீனா எச்சரித்திருப்பதாக ஹொங்கொங் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் ஆரம்பமானது.

ஹொங்கொங் அரசு அந்த சட்டமூலத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்துவிட்டது. ஆனால், மக்கள் அந்த சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.

கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹொங்கொங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இதேவேளை ஹொங்காங் நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள் என்று போராட்டக்காரர்களிடம் ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கேட்டுக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங்கில் நடந்த கலவரம் குறித்து அந்நகர நிர்வாகத் தலைவர் கேரி லேம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது “ஹாங்கொங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தைப் பள்ளத்தில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹொங்கொங்கைப் பாதுகாப்பாகவும் மற்றும் சட்டம் ஒழுங்குடன் அமைதியாக வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

 

அமெரிக்கா கோத்தபயாவை வேவு பார்த்ததா?

கோத்தபயாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் பல வழிகளில் அமெரிக்கா அவரை வேவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் தனது ஆலோசகரான வழுதி என்றழைக்கப்படும் நபருடன் கோத்தபயாவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு போரை முடிவிற்குக் கொண்டுவர வழுதி உதவியதாகவும் தெரியவருகின்றது. இதற்காகவே குறித்த நபர் கோத்தபயாவை சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பதில் ராஜாங்க செயலர் அலைஸ் வெல்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ, கோத்தபயா ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தயாராக இருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.