மஹிந்த அரசின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைக்கவேண்டும் – அசாத் அலி

மஹிந்த அரசாங்கத்தின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைப்பதற்கு மைத்திரிபால, – ரணில் அரசாங்கத்துக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதாகவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு ,எஞ்சியிருக்கும் நாட்களிலாவது நிறைவேற்ற வேண்டுமெனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாது கோட்டாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. மொட்டு கட்சியினர் மஹிந்தவை நிறுத்தினாலும் மண் கௌவியே தீருவர். பெரும்பான்மையின வாக்குகள் மூன்று பெரும்பான்மையின கட்சிகளுக்கு பிரிந்து செல்லும். எனவே மொட்டு கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறலாமென கனவு காண்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் கள்வர்களும் ஊழல் வாதிகளும் இணைந்து தோற்றுவித்த இந்த மொட்டு கட்சியில் ஜனநாயகத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது? கடந்த ஆட்சியில் சட்டத்தை மதிக்காது, நீதிக்கு தலைவணங்காது செயல்பட்ட கோட்டா , விமல் வீரவன்ச போன்றவர்களின் நடவடிக்கைகளை மக்கள் மீண்டும் நினைத்து பார்க்கின்றனர்.